திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல்லில் ராணுவ வீரர்கள், காவல் துறையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பிற்க்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் என்பவர் தலைமை […]
