சிவகங்கையில் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க கோரியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,679 வாக்கு பதிவு மையங்கள் உள்ளன. இந்த வாக்குப்பதிவு மையங்களில் பணி புரிவதற்காக ஒரு மையத்திற்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 59 […]
