திருநெல்வேலியில் தேர்தல் பணியை மேற்கொள்ளும் காவலர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்கள். தமிழகத்தில் மீண்டும் கொரோனா படையெடுப்பதால், தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசியை போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டார்கள். அந்த வகையில் நெல்லையில் மாவட்ட கலெக்டரும் , போலீஸ் சூப்பிரண்டான மணிவண்ணனும் தடுப்பூசி போட்டுக்கொண்டத்தையடுத்து சில முக்கிய அதிகாரிகளும் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர் . மேலும் நெல்லையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு […]
