சிறப்பாக நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பகுதியில் பழமை வாய்ந்த அர்த்தநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். ஆனால் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த வருடம் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றது. […]
