தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பகுதியில் தொழிலாளர்கள் பலர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் கோட்டபாடியில் காட்டு யானைகள் புகுந்து தொழிலாளர்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதுகுறித்து அங்கு வசிக்கும் தொழிலாளர்கள் சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தொழிலாளர்களின் குடியிருப்பு முற்றுகையிட்ட காட்டு யானைகளை விரட்டி அடித்தனர். மேலும் […]
