தொடர் கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பரம்பிக்குளம் அணையில் வினாடிக்கு 2721 கன அடி […]
