திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தே.தி.மு.க. பிரமுகரையும், அவருடைய மகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 20-ஆம் தேதி சுற்றுலா தலங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
