Categories
ஆன்மிகம்

“புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்”…. விமர்சையாக நடந்த திருவிழா…. பிராத்தனையில் கிறிஸ்தவர்கள்….!!!!

புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் வெகு விமர்சையாக திருவிழா நடந்து முடிந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் கடந்த எட்டு நாட்களாக திருவிழா நடந்து வந்துள்ளது. இந்த திருவிழாவின் அனைத்து நாட்களிலும் மாலை வேளையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கூடலூர், கம்பம், ஆம்பூர்பாளையம், லோயர்கேம்ப், நாராயணதேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவின் இறுதி நாளான நேற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எந்த அனுமதியும் வாங்கல…. முறையா ஒன்னும் செய்யல…. தனியார் மருத்துவமனைக்கு சீல்….!!

அனுமதியின்றி இயங்கி வந்த கருத்தரித்தல் மருத்துவமனைக்கு அரசு சீல் வைத்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் கருத்தரிப்பும் மற்றும் குழந்தையின்மை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் நடத்திவருவதாக அரசுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சுகாதாரத்துறையினர் அங்கு சென்று நடத்திய ஆய்வுகளில் அந்த மருத்துவமனை எந்தவித அனுமதியும் பெறாமல் இயங்கி வருவது உறுதியானது. இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதால் சுகாதார பணி இணை இயக்குனர் லட்சுமணன், ஆண்டிபட்டி அரசு […]

Categories
தேனி மாநில செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… பட்டப்பகலில் நடுரோட்டில் சரமாரியாக வெட்டிய கணவர்… கொடூரத்தின் உச்சம்.. !!!

தேனி மாவட்டத்தில் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர், மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி  மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் சந்திரன்(49) மற்றும் அவரது மனைவி முனியம்மாள்(42) வசித்துவந்தனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளார்கள். குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவரின் மனைவி முனியம்மாள், கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார். அதனை பொருட்படுத்தாத அவளின் கணவன் சந்தேகப்பட்டு வேலைக்கு போக வேண்டாம் என்று கூறி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீராத வயிற்றுவலி…. விரக்தியில் இருந்த தொழிலாளி…. எடுத்த விபரீத முடிவு….!!

தீராத வயிற்று வலியினால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் வசிப்பவர் சுப்புராஜ். தொழிலாளியான  இவர் கடந்த ஆறு மாதங்களாக  தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால்  நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி விழுந்தார். இதனைதொடர்ந்து  அக்கம்பக்கத்தினர் சுப்புராஜை  தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா….? லண்டனிலிருந்து திரும்பியவர்…. உறுதியான தொற்று…!!

லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய என்ஜினீயருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  பிரிட்டனின் தலைநகர் லண்டனில் புதிய வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பும் மக்களை அந்தந்த நாட்டு அரசு பரிசோதனை செய்து தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகளை செய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் தேனி மாவட்டத்தில் இருந்து வந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி…. வாகனம் மோதியதா…? வனத்துறையினர் விசாரணை…..!!

இரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை குட்டியின் மரணம் குறித்து   வனத்துறையினர்  விசாரித்து வருகின்றனர்.    தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரூக்கு அருகில் உள்ள சுற்றுலா தளம் மேகமலை. இம்மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்நிலையில்,  சமீப  காலமாக கொரனோ  தாக்கத்தால் போடப்பட்ட ஊரடங்கால் பயணிகள் இம்மலைக்கு  செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில்   தளர்வுகள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் சுற்றுலா தளத்தில் ஒரு வயது மதிக்கத்தக்க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஐந்து பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி… தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு…!!

ஐந்து பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகம்மாள் என்பவர் தேனி மாவட்டம் காந்தி நகரை சேர்ந்தவர். அவரது மகள்கள் மூன்று பேரும் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருப்பையாவின் மகள்கள் ஆகியோரும் குழந்தைகளுடன் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் இரண்டு கேன்களில் மண்ணெண்ணையை மறைத்து எடுத்து வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு முன் வந்த சிறிது நேரத்தில் திடீரென தங்கள் உடல்களிலும் குழந்தைகள் மீதும் […]

Categories

Tech |