Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதல் கணவர் மீது புகார்…. மண்ணெண்ணெய் கேனுடன் காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணால் பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்தில் பழனிசெட்டிபட்டி கிராமத்தில் திலகவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் நேற்று தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தனது மூன்று குழந்தைகளுடன் வந்துள்ளார். அவருடைய கையில் வைத்திருந்த பைமீது சந்தேகம் அடைந்த போலீசார் அதனை வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் அந்த பெண் மண்ணெண்ணெய் கேன் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அவரிடம் இருந்து போலீசார் அதனை வாங்கியுள்ளனர். இதனால் அந்தப் பெண் தரையில் அமர்ந்து தர்ணா செய்ய முயன்றுள்ளார். அதன் பின் போலீசார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பருவமழை காலத்தில்… “பயிர் பாதுகாப்பு செய்வது எப்படி..?” வழிமுறைகள் குறித்து அதிகாரி தகவல்….!!!!!

பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள வாழை, திராட்சை உள்ளிட்ட பழபெயர்கள் 18,750 ஹெக்டேர் அளவிலும் தக்காளி, மிளகாய், வெண்டைக்காய், வெங்காயம், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் 5700 ஹெக்டேர் அளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி கூறியுள்ளதாவது, வாழை பயிர்கள் காற்றுக்கு எளிதில் உடைந்துவிடும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“புதுமைப்பெண் திட்டம்”…. வருகிற 1 ஆம் தேதி முதல்….சிறப்பு முகாம் ஏற்பாடு…. தவறவிட்டுறாதீங்க!!!!

தேனி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகிற 1 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது குறித்து தேனி மாவட்டத்தின் கலெக்டரான முரளிதரன் செய்தி குறிப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்புக்காக மாதம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரக்கன்றுகளை நட்டு…. தீபாவளியை செழிப்பாக கொண்டாடிய இளைஞர்கள்…. சுவாரஸ்ய சம்பவம்….!!!!

தீபாவளி பண்டகையை மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய இளைஞர்களை பலரும் பாராட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் பகுதியில் நன்செய் பசுமை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இவர்களுடன் கோகிலாபுரம் இயக்கத்தை சேர்ந்த தன்னால் தன்னார்வை இளைஞர்களும் கலந்து கொண்டனர். அப்போது உத்தமபாளையம் கொம்பை ரோடு, தாமரைக் குளம் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டனர். அது மட்டுமல்லாமல் பனை விதைகளையும் நடவு செய்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்தை…. சூறையாடிய மர்ம கும்பல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

தேனி மாவட்டத்தில் மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவராக பார்வதி அன்பில் சுந்தரம் இருந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று இரவு மர்ம கும்பல் ஒன்று ஊராட்சி மன்ற அலுவலர் கதவை உடைத்து உள்ளே புகுந்து மேசை நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து நேற்று காலை வழக்கம் போல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில் சுந்தரம் சென்றுள்ளார். அப்போது அவர் அலுவலகத்தின் பூட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… ரவீந்திரநாத் எம்.பி க்கு சம்மன்…!!!!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இது பற்றி வனத்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பற்றி வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் வனப்பகுதியில் ஆட்டுக்கிடாய் அமைத்தவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து அவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனால் சிறுத்தை உயிரிழந்த நிலத்தின் உரிமையாளரை வனத்துறை அதிகாரிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களில்…. இடுப்பளவு தேங்கி நிற்கும் மழை நீர்…. வேதனையில் விவசாயிகள்….!!!!

விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் காற்றாற்று ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்த வெள்ளத்தினால் போஸ் என்பவருடைய விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, மல்லிகைச் செடிகள், பசுந்தீவனம் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ள நீர் இரண்டு நாட்களாகியும் வடியாத காரணத்தினால் பயிர்கள் அழுது தொடங்கியுள்ளது. மேலும் விவசாய நிலங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் மட்டுமல்லாமல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது இங்க எப்படி வந்தது….? பள்ளி நிர்வாகம் அளித்த தகவல்…. விரைந்து வந்த வனத்துறையினர்….!!!!

பள்ளி வளாகத்திற்குள் ஊர்ந்து சென்ற ஆமையை வனத்துறையினர் மீட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் பிச்சம்பட்டி கிராமத்தில் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வளாகத்திற்குள் நேற்று அரிய வகை ஆமை ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் வன அலுவலர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து ஆமையை பார்வையிட்டுள்ளனர். அப்போதுதான் அந்த ஆமை தண்ணீரில் மட்டும் வளரும் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்த ஆமையை வனத்துறையினர் மீட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர் மழை எதிரொலி… “ஆண்டிபட்டி அருகே கிராமத்தைச் சூழ்ந்த வெள்ளம்”…. சாலை துண்டிப்பு….!!!!!

ஆண்டிப்பட்டி அருகே தொடர் மழை எதிரொளியால் வெள்ள நீர் கிராமத்தை சூழ்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. நாச்சியார் புறத்திலும் கனத்த மழை பெய்தது. இதனால் கிராமத்தில் ஆங்காங்கே பல இடங்களில் மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆண்டிபட்டி, நாச்சியார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்ததன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரை நிர்வாண போராட்டம்…. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…. மின்வாரிய ஊழியர்கள் அதிரடி….!!!!

மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண கோலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது அகவிலைப்படி மூன்று சதவீத உயர்வை மத்திய அரசு அளித்த தேதியில் இருந்து நிலுவையுடன் வழங்க வேண்டும், மேலும் மின்வாரிய அரசாணை இரண்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், அது மட்டுமல்லாமல் மின்வாரியம் பொது துறையாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கவர்னர் கருத்துக்கு எதிர்ப்பு”…. திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம்….!!!!!!

கவர்னரின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. தமிழக கவர்னர் அண்மைக்காலமாக திருக்குறள் குறித்து தனது கருத்துக்களை கூறி வருகின்றார். இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி தபால் நிலையத்தில் இந்திய ஜனநாயக வணிக சங்கம் சார்பாக கவனக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தேனி தாலுகா செயலாளர் நாகராஜ் தலைமை தாங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் காரைக்கால் நிர்வாகிகள் பால்பாண்டி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தேனியில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்தவர்கள்”…. தகவல் வெளியிட்ட மேலாளர்….!!!!!!!

தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்தவர்களின் விவரம் குறித்து மேலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் சென்ற 2008 ஆம் வருடம் முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி தேனியிலும் தொடங்கப்பட்டது. பின்னர் மக்களின் தேவைக்கேற்ப ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தேனியில் சேவை தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 2 லட்சம் 76 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன்பெற்றுள்ளார்கள். ஆம்புலன்ஸ் தேவையானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பிரசவ தேவை அவசர தேவை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பு”…. தேனியில் நடைபெற்ற முகாம்….!!!!!

தேனி அருகே ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரத்தில் வட்ட வழங்கல் துறை சார்பாக ரேஷன் கார்டு சார்ந்த குறைதீர்க்கும் முகமானது நடந்தது. இம்முகாமில் வட்டார வளங்கள் அலுவலர் ராமராஜன் பங்கேற்று குறைகள் குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் ஆகிய பல்வேறு பணிகள் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மதிமுக நிர்வாகிகளிடையே தகராறு”…. எதுக்காக தெரியுமா…??? தேனியில் பரபரப்பு….!!!!

தேனியில் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் டிக்கெட் கிடைக்காததால் நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தியேட்டரில் நேற்று மதிமுக சார்பாக வைகோ ஆவணப்பட வெளியிட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆவணப்படத்தை வெளியிட்டார். இதை தொடர்ந்து திரையரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு திரண்டு வந்திருந்தார்கள். இதில் சிலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என சொல்லப்படுகின்றது. இதனால் நிர்வாகிகளிடையே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விவசாயிகள் விளைப்பொருட்களை இருப்பு வைத்து கடன் பெறலாம்”…. அதிகாரி தகவல்….!!!!!

விவசாயிகள் விளைபொருட்களை இருப்புவைத்து கடன் பெறலாம் என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பகுதியில் முதல் போக நெல் அறுவடை பணி ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் கம்பம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை மூலமாக மறைமுக ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பங்கேற்று விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தமிழக பகுதிகளுக்கு கூடுதல் நீர் திறப்பு”….. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்தது….!!!!!!

தமிழக பகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் எதிரொளியாக முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை இருக்கின்றது. இந்த அணையை நம்பித்தான் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இருக்கின்றது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில வாரங்களாக மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் குறைய ஆரம்பித்தது. மேலும் தமிழக பகுதிக்கு கூடுதல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஏடிஎம் கார்டை திருடி 44,000 அபேஸ் செய்த மர்ம ஆசாமி”…. போலீசார் வலைவீச்சு….!!!!!

பெண்ணிடம் ஏடிஎம் கார்டை திருடி 44,000 அபேஸ் செய்த மர்மநபரை போலீஸ் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் மண்டு கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த சந்திரா என்பவர் தனது வீட்டில் வங்கி கணக்கின் ஏடிஎம் கார்டை வைத்திருக்கின்றார். அதனை மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டார்கள். அந்த ஏடிஎம் கார்டுடன் ரகசிய எண்ணையும் குறித்து வைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது. அந்த கார்டை பயன்படுத்தி சந்திராவின் வங்கி கணக்கிலிருந்து 44 ஆயிரத்தை அந்த மர்ம நபர் அபேஸ் […]

Categories
மாநில செய்திகள்

“சிறுத்தையின் மர்ம மரணம்” ஓபிஎஸ் மகனை உடனடியாக கைது செய்ய வேண்டும்…. விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அதிமுக எம்.பியும், பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின் வேலியில் சிக்கி கடந்த 28-ஆம் தேதி 2 வயதுடைய சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற விவசாயியை கடந்த மாதம் 29-ஆம் தேதி வனத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கால்நடை வளர்ப்போர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் குறைப்பு”…. மின் உற்பத்தி குறைவு….!!!!!!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைந்ததால் லோயர் கேம்பில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. தமிழக-கேரளா எல்லையில் முல்லைப் பெரியாறு அணை இருக்கின்றது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. சென்ற சில வாரங்களாக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததன் காரணமாக மின் உற்பத்தியும் குறைந்தது. நான்கு ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 126 முதல் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. அந்த வகையில் இன்று காலை முதல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் விதைகள் இருப்புயிருக்கிறது”…. அதிகாரி தகவல்….!!!!!!

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடிக்கான நெல் விதைகள் இருப்பு இருப்பதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடி பணிகள் சென்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கியது. தற்பொழுது வயல்களில் இருக்கும் நெற்பயிர்கள் ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருக்கின்றது இந்த நிலையில் இரண்டாம் போக சாகுபடிக்கான நெல் விதைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக கம்பம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் பூங்கோதை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு…. “5 பேர் மீது வழக்கு பதிவு”….!!!!!

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.  தேனி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி சுபத்ரா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனது தந்தை பார்த்தசாரதி பெயரில் கோபாலபுரம் பகுதியில் 12.5 சென்ட் நிலம் இருக்கிறது. போலி ஆவணங்கள் மூலமாக அந்த நிலத்தை கோபாலபுரத்தைச் சேர்ந்த திருவேங்கடம்மாள் தனது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு இல்லை… அடிப்படை வசதிகள் இல்லை…. “சின்னசுருளி” அருவிக்கு சிறப்பு திட்டங்கள் வருமா….? எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள்…!!!!!!

சின்னச் சுருளி அருவியில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்வதற்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் அருகே சுருளிஅருவி இருக்கின்றது. இந்த அறிவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புவார்கள். ஆனால் இங்கே சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு குறைவாகவே இருக்கின்றது. எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. அருவிக்கு செல்வதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்படும். அருவியில் குளிப்பதற்கு பாதுகாப்பான சூழல் இல்லை. […]

Categories
மாநில செய்திகள்

“ஓபிஎஸ் மகன் தோட்டத்தில் சிறுத்தை பலி” விவசாயி திடீர் கைது…. தேனியில் பரபரப்பு…..!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியல் திடீரென சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. இதைப்பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு‌ சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்பதற்காக போராடினர். ஆனால் சிறுத்தை தானாகவே சோலார் மின்வேலியை விட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்”…. தேனியில் பரபரப்பு….!!!!!!!

பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற 24ஆம் தேதி கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதன்பிறகு கருவேல்நாயக்கன்பட்டியில் இருக்கும் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உபகரணங்கள் வாங்குவதற்காக வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கபடவில்லை. இதன்பின் அவர்கள் நீண்ட நேரம் வெளியே காத்திருந்தார்கள். பின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் அறிக்கை கிடைக்கும்” அண்ணா பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியர் கைது….. போலீஸ் அதிரடி…..!!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அண்ணா பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் பெருமாள்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் குளத்தில் இருந்து மண் அள்ளி வந்து தனது விவசாய நிலத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக பெருமாள்சாமி கனிமவளத்துறையினரிடம் சென்று மண் அள்ளுவதற்கு அனுமதி தருமாறு கேட்டுள்ளார். அப்போது குளத்தின் மண்ணை பரிசோதனை செய்து அறிக்கை தந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்வதை ஏற்க முடியாது – ஐகோர்ட் மதுரை கிளை..!!

அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்வதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தேனி வீரபாண்டியில் முறைகேடாக பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்வதை உயர்நீதிமன்ற கிளை ஏற்காது. அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு – சேலத்தில் பெரும் பரபரப்பு …!!

தேனி சின்னமனூரில் பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்களின் வீடு, கடை, அலுவலகம் மற்றும் சொத்துக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசுதல்,  கல் எறிதல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இது தமிழகம் முழுவதும் நடந்து வந்த நிலையில் பல பகுதிகளில் போலீஸ் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜகவின் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்”…. தேனி மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரி தகவல்….!!!!!

தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சீதா லட்சுமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2022-23-ம் வருடம் தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்தரி, கொத்தமல்லி, முட்டைக்கோஸ், தக்காளி உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,371.55 பிரிமியம் தொகை செலுத்த அடுத்த வருடம் பிப்ரவரி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவு’…. சாலை மறியலில் ஈடுபட்ட அரசு கல்லூரி மாணவர்கள்….!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக கூறி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் க.விலக்கு ரயில் ரோடு பகுதியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகின்றது. இங்கு அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று காலை விடுதியில் பணியாற்றிய விடுதி காப்பாளர் மற்றும் சமையலர் உள்ளிட்டோர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பஞ்சமி நிலத்தை மீட்டு வீட்டு மனை பட்டா வழங்குங்க”…. 3-வது நாளாக தொடர்ந்த போராட்டம்….!!!!!!

பஞ்சமி நிலத்தை மீட்க கோரி மூன்றாவது நாளாக குடிசைகள் அமைத்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள். தேனி அருகே உள்ள வடப்புதுப்பட்டியில் இருக்கும் பஞ்சமி நிலம் எனக் கூறப்படும் ஆக்கிரமிப்பை அகற்றி வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சென்ற 19ஆம் தேதி அப்பகுதியில் குடிசைகள் அமைத்து ஏராளமான மக்கள் போராட்டம் நடத்தினார்கள். போலீசார் பேசு வார்த்தை நடத்தியதில் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தார்கள். இதனிடையே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்”… மூதாட்டி தீக்குளிக்க முயற்சி….. பரபரப்பு…‌!!!!!!

ஆண்டிபட்டி அருகே வீட்டை இடிக்க முயன்றதால் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியை அடுத்திருக்கும் சக்கம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு, கடை, மாட்டு கொட்டகை உள்ளிட்டவற்றை கட்டியதாக சொல்லப்படுகின்றது. இதனால் சிலர் அரசு இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அரசு இடத்தை மீட்க நடவடிக்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவனை பிரிந்து காதலனுடன் செல்ல திட்டம்… “ஸ்கேன் ரிப்போர்ட்” ஆல் சிக்கிய பெண்…. டாக்டரின் பரபரப்பு புகார்….!!!

போலியான ஸ்கேன் ரிப்போர்ட்டை உருவாக்கிய பெண் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் எச்சரித்து அனுப்பினர். தேனியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பே வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் பெண் அந்த வாலிபருடன் பழகி வந்துள்ளார். இதனை அடுத்து கள்ளக்காதலுக்காக அந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தையை பிரிந்து செல்ல திட்டமிட்டுள்ளார். மேலும் கணவர் மூலம் பிரச்சனையை உருவாக்கி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற ராணுவ வீரர்….. வீட்டில் நடந்த கொடூர சம்பவம்….. போலீஸ் விசாரணை…!!!

ராணுவ வீரர் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சில்லமரத்துப்பட்டி பகுதியில் ராணுவ வீரரான ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், நிஷா நேத்ரா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அசாம் மாநிலத்தில் வேலை பார்த்த ரங்கநாதன் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மனைவி […]

Categories
மாநில செய்திகள்

சார்பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்?…. அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன?…. ஐகோர்ட் கிளை எச்சரிக்கை..!!

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை தொடர்ந்தால் துறை செயலாளர் ஆஜராக நேரிடும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திர பதிவு செய்யப்படுகின்றன? இது போன்ற நிலை தொடர்ந்தால் அந்த துறை செயலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. வழக்கின் பின்னணி என்னவென்றால் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“அனுமதியின்றி முல்லை பெரியாற்றிலிருந்து விளைநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட குழாய்கள்”….. அகற்றப்பட்டதால் விவசாயிகள் வேதனை…!!!!!!

முல்லைப் பெரியாற்றிலிருந்து அனுமதி இன்றி விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற குழாய்களை அதிகாரிகள் அகற்றினார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் தென்னை, நெல், வாழை, திராட்சை உள்ளிட்டவைகள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முல்லைப் பெரியாற்றிலிருந்து வரும் குழாய்களில் அனுமதி இல்லாமல் தோட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாக தகவல் கிடைத்திருக்கின்றது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று சோதனை செய்ததில் அனுமதி இன்றி விவசாய தோட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிகாரிக்கு வந்த ரகசிய தகவல்… ரோந்துப் பணி… “600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்”…!!!!!

கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். தேனி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து குமுளி வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை துணை தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது ஐந்தாவது வார்டு முனியாண்டி கோயில் தெரு பகுதியில் சாலையோரமாக 11 மூட்டைகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஒட்டாண்குளத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்”…. நோய் பரவும் அபாயம்…. மக்கள் கோரிக்கை…!!!!!

ஒட்டாண்குளத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகர மையப்பகுதியில் ஒட்டாண்குளம் அமைந்திருக்கின்றது. இந்த குளத்தில் தான் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 18 ஆம் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது. இதன் வாயிலாக 46 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகின்றது. மேலும் கால்நடையின் குடிநீருக்காகவும் இந்த குளம் பயன்படுகின்றது. இந்த நிலையில் கூடலூர் நகரப் பகுதியில் இருக்கும் இறைச்சி கடைகளில் சேரும் கோழி இறைச்சி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தேனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்”…. வடிகால் தூர்வாரும் பணி தொடக்கம்….!!!!!

தேனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் தூர்வாரும் பணியானது தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டியிலிருந்து நேரு சிலை சிக்னல் வரை செல்லும் சாலையில் இருபுறமும் மழைநீர் வடிக்கால் அமைந்துள்ள நிலையில் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருக்கின்றது. இதனால் வடிக்கால் பகுதியில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து இருக்கின்றது. இதன் விளைவாக மழை காலங்களில் மழைநீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வாடிக்கையாளர் திட்டமிட்டதை தொடர்ந்து பொம்மையகவுண்டன்பட்டி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்ட முல்லை பெரியாறு 18-ம் கால்வாய்”…. திறந்து வைத்த ஆட்சியர்…!!!!!

முல்லை பெரியாற்றில் பாசனத்திற்காக பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம், போடி தாலுகாவில் இருக்கும் கோம்பை, பண்ணைபுரம், தேவாரம், சிந்தலைசேரி, சங்கராபுரம், கோடாங்கிபட்டி, பொட்டிபுரம் ஆகிய பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் முல்லைப் பெரியாற்றில் பதினெட்டாம் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பாசனத்திற்காக பதினெட்டாம் கால்வாயில் இருந்து தண்ணீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து இன்று பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று […]

Categories
மாநில செய்திகள்

இன்று 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்.!!

இன்று 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தொழிலதிபர் வீட்டில் மர்ம நபர்கள் கைவசம்”…. போலீசார் தீவிர விசாரணை….!!!!!!

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 60 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பங்கஜம் ஹவுஸ் தெருவை சேர்ந்த ராஜா ராம் என்பவர் மஞ்சள் தூள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். நேற்று அவரின் வீட்டிற்கு வேலை பார்க்கும் தொழிலாளி உமா என்பவர் வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்துவதற்காக…. பிளஸ்-1 மாணவர்களுக்கு திறனறித் தேர்வு…!!!!!!

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்துவதற்கான பிளஸ் 1 மாணவர்களுக்கான திறனறித் தேர்வு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகின்றது. அரசு தேர்வுகள் இயக்கம் மூலமாக தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு 2022-23 கல்வியாண்டில் பயிலும் அனைத்து பள்ளி பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகின்றது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் தேர்வுக்கான பாட புத்தகம் ஆகும் தேர்வில் ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் மூலம் 100 கேள்விகள் கேட்கப்படுகின்றது. இந்த தேர்வானது வருகின்ற […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது போல் மர்ம நபர்கள் கைவரிசை”…. போலீசார் வலைவீச்சு….!!!!!

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது போல் பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் கெங்குவார்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகின்றார். இவர் நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேனி மாவட்டத்தில் உள்ள கெங்குவார்பட்டிக்கு வந்து கொண்டிருந்த பொழுது பெரியகுளம்-வத்தலகுண்டு இடையேயான மெயின் ரோடு சாலையில் இருந்த கல்லில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் தவறை கீழே விழுந்தார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பத்திர எழுத்தர் அலுவலகத்தில் 6 லட்சம் கொள்ளை”…. 5 கடைகளில் கைவரிசை முயற்சி….. போலீசார் விசாரணை…‌!!!!!!

தேனியில் பத்திர எழுத்தர் அலுவலகத்தில் ரூபாய் 6 லட்சம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் புறாவழிச் சாலை பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்பவர் ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பத்திரம் எழுதும் அலுவலகம் வைத்திருக்கின்றார். இந்நிலையில் இன்று காலை அலுவலகத்தை திறப்பதற்காக சென்ற பொழுது அலுவலகத்தின் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஆவணங்கள் சிதறி கிடந்தது. அங்குள்ள மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாய் கொள்ளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி பேருந்து நிலையம்…. “தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி”…. ஆட்சியர் திறந்து வாய்ப்பு…..!!!!!!!

தேனி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படம் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலைய வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் இந்த கண்காட்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார், அல்லிநகரம் நகராட்சி துணைத் தலைவர் செல்வம், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“போடி அருகே அடுத்தடுத்து 6 கடைகளில் மர்ம நபர்கள் கைவசம்”…. போலீசார் வலைவீச்சு….!!!!

போடி அருகே அடுத்தடுத்து ஆறு கடைகளில் பணம், பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே இருக்கும் ரங்கநாதபுரத்தில் உள்ள வணிக வளாகத்தில் செல்போன், ஜவுளி என அடுத்தடுத்து ஆறு கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரிகள் தங்கள் கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஆறு கடைகளில் பூட்டை உடைத்து பணம் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றார்கள். மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பயிர் கடன் வழங்குவதில் முறைகேடு”…. கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்….!!!!!!

மயிலாடும்பாறையில் கடன் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகின்ற நிலையில் இங்கு 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை….. “தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற வேண்டுமா…?” ஆட்சியர் தகவல்….!!!!!!!

தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, அடுத்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாடுவதற்கு பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு சில்லறை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. ஆகையால் நிரந்தர […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பார்வையற்ற பெண்… “வீட்டில் கழிப்பறை கட்டும் பணி”… ஆட்சியர் நேரில் ஆய்வு….!!!!!!

பார்வையற்ற பெண்ணின் வீட்டில் கழிப்பறை கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே இருக்கும் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகள் மணிமேகலை. இவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். இவரின் வீட்டில் கழிப்பறை இல்லாததால்  அப்பகுதியை சேர்ந்த பெண்களின் உதவியுடன் பொதுக்கழிப்பறைக்கு சென்று வந்துள்ளார். இதனால் அவர் மிகவும் சிரமம் அடைந்து வந்த நிலையில் இது குறித்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்தது. இதனால் […]

Categories

Tech |