சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் குற்றவாளி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கூடல் நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கணேஷ்முண்டா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருட்டு வழக்கில் மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் விசாரணைக்காக கணேஷ்முண்டாவை மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்து […]
