தமிழகத்தில் தேநீர் மற்றும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் இணைந்து ஆலோசனை செய்து புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. […]
