நம் நாட்டிற்கு தேசிய மொழி எதுவும் இல்லை என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் […]
