பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இரண்டு மாதங்களுக்குள் போலீஸ் விசாரணை முடிய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விசாரணை துரிதமாக நடைபெற வேண்டுமென்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை […]
