Categories
தேசிய செய்திகள்

100 நாட்கள் வேலை திட்டத்தில் மாற்றம்…. நாடு முழுவதும் ஜன,.1 முதல் அமல்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஒரு ஆண்டில் 100 நாட்கள் உடல் உழைப்பு சார்ந்த வேலை வழங்கப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு உரிய ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் 100 நாட்களுக்கு மேல் மாநில அரசு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கினால் தன் சொந்த நிதியிலிருந்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே, போன் பே, பேடி எம்: ஒரு நாளில் இவ்வளவு பணம் தான் அனுப்ப முடியுமா??…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தற்போது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(என்பிசிஐ) யூபிஐ வாயிலாக ஒரு நபர் பணம் செலுத்துவதற்குரிய வரம்பை விதித்துள்ளது. அந்த வகையில் ஒரு நபர் நாளொன்றுக்கு ரூபாய்.1 லட்சம் வரை மட்டுமே டிரான்ஸாக்ஷன் செய்ய முடியும். இப்போது நீங்கள் பயன்படுத்தும் பல யூபிஐ செயலிகள் வாயிலாக எவ்வளவு பணத்தை ட்ரான்ஸாக்ஷன் செய்து கொள்ளலாம் என இப்பதிவில் காண்போம். அமேசான் பே அமேசான் பே தனது வாடிக்கையாளர்களை நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூபாய்.1 லட்சம் வரை டிரான்ஸாக்ஷன் செய்ய அனுமதிக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நீங்களும் இலவச ரேஷனை பெற?… இதை மட்டும் பண்ணுங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

2023-ம் வருடம் டிசம்பர் மாதம் வரையிலும் நாட்டின் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு ரேஷன் கடைகள் வாயிலாக இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் தொடரும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இந்நிலையில் நீங்களும் மலிவான (அ) இலவச ரேஷன் பொருட்களை பெற விரும்பினால், முதலில் ஒரு ரேஷன் கார்டைப் பெற வேண்டியது அவசியம் ஆகும். அதை நீங்கள் வீட்டிலேயே உருவாக்கிகொள்ளலாம். ஆகவே நீங்களும் இலவச ரேஷனை பயன்படுத்திக்கொள்ள விரும்பினால், அதன் செயல்முறை என்ன என்பதை தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு!…. இனி அதற்கு வரி விலக்கு உண்டு?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

வருமான வரி என்பது வரி வரம்புக்குள் வரக்கூடிய அனைத்து இந்திய குடிமக்களும் செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான வரி ஆகும். நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவருக்கும் இவ்வரி முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இப்போது இதுகுறித்த ஒரு முக்கிய அப்டேட் வந்திருக்கிறது. வருமான வரி செலுத்துவோருக்கு அரசு பெரிய நிவாரணமானது கொடுக்கப்போகிறது. அதாவது, வரி செலுத்துவோருக்கு விலக்கு அளிக்கும் அடிப்படையில் பெரிய அளவில் நிவாரணம் வழங்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது. அதன் புது உத்தரவை நிதயமைச்சகம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா டைம்ல இது தேவைதானா?…. 60,000 பயணிகள் அங்கே போக போறாங்க?… வெளிவரும் தகவல்கள்….!!!!

பீகார் கயாவில் வருகிற டிசம்பர் 29, 30, 31 தேதிகளில் “போத் மஹோத்சவ்” எனும் போதனை நிகழ்ச்சி திபெத்திய புத்த மதகுரு தலாய் லாமா தலைமையில் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தலாய் லாமா பீகார் மாநிலத்திற்கு வந்து உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 50 நாடுகளை சேர்ந்த 60,000 ஆன்மீக பயணிகள் பீகாருக்கு வர இருகின்றனர். இதன் காரணமாக கயா விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட சோகம்….!! ஐசியுவில் நடந்த திருமணம்…. காரணம் என்ன தெரியுமா….?

உயிருக்கு போராடிய தாயின் கண்முன்பு ஐசியுவிலேயே  மகள் திருமணம் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள பாலி என்ற  கிராமத்தில் லாலன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூனம் வர்மா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சாந்தினி  குமாரி என்ற  மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று  முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அவரை  குடும்பத்தினர் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

ரொம்ப பெரிய மனசு!… ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொத்தை…. திருப்பதிக்கு வழங்கிய ஓய்வுபெற்ற செவிலியர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலசை கிராமத்தில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற செவிலியர் என்.கே.நேமாவதி. இவர் புதியதாக தந்து பெயரில் கட்டிய 2 மாடி கட்டிட வீட்டை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த வீட்டின் மதிப்பானது ரூபாய்.70 லட்சம் ஆகும். அதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கட்டிடத்தில், தேவஸ்தான எஸ்டேட் துறையின் சிறப்பு அதிகாரியான மல்லிகார்ஜுனாவிடம் வீட்டு ஆவணங்கள் மற்றும் சாவியினை நேமாவதி வழங்கினார். இவ்வாறு ஓய்வுபெற்ற செவிலியர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு!… “பாக்கி பணத்தை தா”…. தொழிலாளியை லாரி மீது தள்ளிவிட்ட நபர்…. நொடியில் பறிபோன உயிர்….!!!!

தெலங்கானா ஹைதராபாத்திலுள்ள பாலா நகர் நர்சாபூர் குறுக்கு சாலையில் ஸ்ரீனிவாஸ் (35) என்பவர் வசித்து வந்தார். இவர் சென்ற 2 நாட்களுக்கு முன் காசிராம் மற்றும் பிற தொழிலாளர்களுடன் கட்டிட வேலை செய்துள்ளார். இதற்காக ரூபாய்.1,200 சம்பளமாக பேசப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் காசிராம் என்பவருக்கு ஸ்ரீனிவாஸ் ரூபாய்.800 மட்டுமே ஊதியமாக வழங்கியுள்ளார். இதன் காரணமாக நர்சாபூர் நடைபாதையில் வைத்து ஸ்ரீனிவாஸ் மற்றும் காசிராம் இடையில் மீதமுள்ள 400 ரூபாய்காக தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அப்பகுதியினர் அவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 7 முதல் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு…. எந்த மாநிலத்தில் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

 சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுவது வழக்கம். அதேபோல் பீகார் மாநிலத்தில் சாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அப்போது முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் தற்போது பாஜகவில் இருந்து விலகி தானு கட்சி ஆதரவுடன் மீண்டும் முதல் மந்திரி ஆனார். இந்நிலையில் பீகாரில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த மாதம் 7-ஆம்  தேதி […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களில் முகக்கவசம் கட்டாயம்…. மாநில அரசு முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

சீன நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரிய குடியரசு பகுதியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா உட்பட பிற நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், சுகாதார துறை உயரதிகாரிகள் மற்றும் கொரோனா தொழில்நுட்ப அறிவுறுத்தல் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்போது மூடிய பகுதிகள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் சிறுமி மீது விழுந்த இரும்பு கேட்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. சோகம்…..!!!!

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் இரும்பு கேட் விழுந்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்ற டிசம்பர் 20ஆம் தேதி ராம்புரா கிராமத்திலுள்ள ஆரம்பப்பள்ளி வளாகத்தில் ஒரு கனமான இரும்பு கேட் அருகில் அஷ்மிதா மொஹானியா என்ற 8 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது கேட் அறுந்ததில் இரும்பு கதவானது சிறுமி மீது விழுந்தது. இதன் காரணமாக சிறுமியின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அதன்பின் சிறுமி சிகிச்சைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

பாராகிளைடிங் சாகசத்தின் போது விபரீதம்: ஒரே நாளில் 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

தென்கொரியாவை சேர்ந்த ஷின் பயான்ங் மூன் என்ற நபர் குஜராத் மாநிலத்துக்கு வருகை தந்தார். இவருடைய உறவினர்கள் குஜராத் வதோதரா பகுதியில் வசிக்கின்றனர். அவர்களை பார்க்க வந்த ஷின், அங்கு உள்ள உற்றாருடன் விசத்பூரா என்ற பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளார். இப்பகுதியில் பாராகிளைடிங் என்ற ஆகாசத்தில் பலூன் வாயிலாக பறக்கும் சாகச விளையாட்டு பிரபலமாக இருக்கிறது. அப்போது ஷின் இந்த பாராகிளைடிங் சாகச விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு உள்ளார். இதற்கிடையில் 50 அடி உயரத்தில் பறந்து […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத DA நிலவைத்தொகை?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…. வெளிவரும் தகவல்கள்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, 18 மாத நிலுவைத்தொகைக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு பெரிய அப்டேட் வந்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் புது ஆண்டில் கொரோனா தொற்று நோய்களின் போது நிறுத்தப்பட்ட 18 மாத DA நிலுவைத்தொகையை அரசாங்கம் வழங்க வாய்ப்பு உள்ளதாக நம்புகின்றனர். இந்த வருடம் பட்ஜெட்டுக்கு பின் அரசு ஊழியர்களின் கணக்கில் இப்பணத்தை வரவு வைக்கும் என்ற நம்பிக்கை இப்போது மேலோங்கி இருக்கிறது. தேசிய கவுன்சில் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணமா….? நடிகை துனிஷா தற்கொலை வழக்கு…. பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்….!!!!

பிரபல நடிகை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை துனிஷா சர்மா. இவர் பல்வேறு பாலிவுட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். இவர் நேற்று திடீரென  படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த படப்பிடிப்பு குழுவினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

“குடிகாரனின் ஆயுள் ரொம்ப குறுகியது”…. பெண் பிள்ளைகளின் பெற்றோர் இதை மட்டும் பண்ணாதீங்க…. மத்திய மந்திரி கவுஷல் கிஷோர் வேதனை….!!!!!

குடிக்கும் ஆண்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள் என மத்திய மந்திரி கவுஷல்  கிஷோர் கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லம்புவா  சட்டசபை தொகுதியில் போதைப்பழக்க  மீட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வீட்டு வசதி மந்திரி கவுஷல்  கிஷோர் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “எனக்கு ஆகாஷ் கிஷோர் என்ற மகன் இருந்தான். அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தான். இதனால் நாங்கள் அவனை ஒரு போதை மீட்பு மையத்தில் சேர்த்தோம். அவன் […]

Categories
தேசிய செய்திகள்

இறுதிச் சடங்கில் கெட்டுப்போன உணவு…. 40 பேருக்கு வாந்தி, மயக்கம்…. பின் நடந்த சம்பவம்….!!!!

சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் ராமானுஜ நகர் மேம்பாட்டு தொகுதிக்கு உட்பட்ட விசுன்பூர் கிராமத்தில் நேற்று காலை இறுதிச்சடங்கில் பங்கேற்ற 40க்கும் அதிகமானோர் உணவு சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் உடல்நிலை பாதிக்கப்பட்ட அனைவரும் சூரஜ்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சூரஸ்பூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சிங் கூறியதாவது,  உணவு கெட்டுப்போனதால் அவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். தற்போது அனைவரும் நலமாக இருக்கின்றனர். மேலும் இதுகுறித்து உரிய […]

Categories
தேசிய செய்திகள்

“காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதா”… ஒப்புதல் அளிக்குமா நாடாளுமன்றம்?…. LIC போடும் பிளான்….!!!!

காப்பீட்டு சட்டங்கள் திருத்த மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பின், பொது மற்றும் சுகாதார காப்பீட்டு துறைகளில் இயங்கும் அடிப்படையிலான கூட்டு உரிமத்தை பெற இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) திட்டமிட்டு உள்ளது. நாட்டில் இதுவரையிலும் 4.2% மக்களுக்கு மட்டும்தான் காப்பீட்டு பலன்கள் கிடைக்கிறது. காப்பீட்டின் பலன்களை சமூகத்தின் மேலும் பல நிலைகளுக்குக் கொண்டு செல்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு காப்பீட்டு சட்டம் (1938), காப்பீட்டு ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணைய சட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு கொரோனா…. மருத்துவ அதிகாரி தகவல்….!!!!

சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை (டிச.23) சீனாவில் இருந்து தில்லி வழியாக இந்தியா திரும்பிய உத்திரபிரதேசம் ஆக்ராவை சோ்ந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆக்ரா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி அருண் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபா் அவருடைய வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய்க்கு நினைவிடம்…. 4,050 ஹெக்டேரில் நிலம் ஒதுக்கீடு…. மாநில அரசு தகவல்…!!!!

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த குவாலியா் நகரில் அவருக்கு 4,050 ஹெக்டேரில் நினைவு இடம் அமைப்பதற்கு மத்தியபிரதேச அரசு இடம் ஒதுக்கியுள்ளது. கடந்த 1924-ம் வருடம் டிச,.25 ஆம் தேதி குவாலியரில் வாஜ்பாய் பிறந்தாா். திருமணம் செய்து கொள்ளாமல் தேச சேவைக்காக தன்னை முழுமையாக அா்ப்பணித்த இவா், காங்கிரஸ் கட்சியை சாராமல் 5 வருட கால ஆட்சியை நிறைவு செய்த முதல் பிரதமா் என்ற பெருமையைப் பெற்றவா். மேலும் பா.ஜ.க-வின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜன […]

Categories
தேசிய செய்திகள்

ரகசிய தகவல்!…. பாகிஸ்தான் எல்லையில் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் பதுக்கல்…. ராணுவம் அதிரடி நடவடிக்கை….!!!!

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பெரும் அளவிலான ஆயுதங்களும் வெடிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராணுவத்தின் 19வது பிரிவின் அதிகாரி மேஜா் ஜெனரல் அஜய் சந்த்புரியா பத்திரிகையாளா்களை சந்தித்து கூறியதாவது, “சென்ற சில வாரங்களாக உரி செக்டாா் ராம்பூா் பகுதியில் அமைந்திருக்கும் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் எல்லை ஊடுருவல்களும் பயங்கரவாதிகளால் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் பதுக்கும் சதிவேலைகளும் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்து. அதனடிப்படையில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை கொடூரமாக தாக்கிய எஸ்ஐ…. பின்னணி என்ன?…. பரபரப்பு சம்பவம்…..!!!!

சமாஜ்வாதி கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கொடூரமான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் காவலர், பெண் ஒருவரை கொடுரமாக தாக்குவது தெரிகிறது. அதாவது உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் எஸ்ஐ ஒருவர் பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பெண் முரண்டு பிடித்ததால் எஸ்ஐ அவரை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த போலீஸ்காரர் மீது […]

Categories
தேசிய செய்திகள்

“நடிகை துனிஷா சர்மா தற்கொலை”… காரணம் இதுதான்?…. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!!

இந்தி திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக துனிஷா சர்மா இருந்து வந்தார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 20 வயதான துனிஷா நடிகைகள் கத்ரீனா கைப், வித்யா பாலன் ஆகியோருடன் நடித்து உள்ளார். இதையடுத்து இந்தி சினிமா துறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு பிரபலமாகினார். தற்போது அலிபாபா தாஸ்தென் – இ -காபுல் என்ற வெப்தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வந்தார். இதனிடையில் சூட்டிங் தளத்தில் துனிஷா சர்மா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க!…. களமிறங்கிய என்ஐஏ குழுவினர்…. சோதனையில் சிக்கிய பொருட்கள்….!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள சிறைச்சாலைகளில் முதன் முறையாக தேசிய புலனாய்வு முகமை குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அம்மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் மத்திய சிறைச்சாலையில் என்ஐஏ குழுவினர் நள்ளிரவு சோதனையில் ஈடுபட்டனர். எல்லை தாண்டிய போதைப் பொருள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக வட இந்தியாவில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கையின் போது மத்திய சிறையிலிருந்து 2 மொபைல் போன்களை என்ஐஏ குழுவினர் பறிமுதல் செய்து உள்ளனர். பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் விநியோகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நம்ம உறவை வலுப்படுத்த!… இந்தியாவுடன் இணைந்து பணிபுரிய நான் ரெடி!…. வாங் யீ சொன்ன விஷயம்…..!!!!

அருணாச்சலப்பிரதேசத்தில் சென்ற 9ம் தேதியன்று தவாங் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வீரர்கள் காயமடைந்தனர். இதில் இந்திய வீரர்களின் தாக்குதலை அடுத்து சீனவீரர்கள் பின்வாங்கினர். சில தினங்களுக்கு பின் இந்திய-சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் கூறியது. இதற்கிடையில் சென்ற 20 ஆம் தேதி இந்தியா – சீனா இடையில் நடந்த 17-வது சுற்று பேச்சுவார்த்தையில் ராணுவ […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா!…. நாட்டு மக்களுக்கு பிரதமர் சொன்ன முக்கிய அட்வைஸ்……!!!!!

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். அதன் அடிப்படையில் இந்த வருடத்தின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது “பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதே சமயம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் முக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…!! சிறுமிக்கு சாக்லேட் கொடுத்த நபர்…. திடீரென கேட்ட சத்தம்…. கதறி துடித்த பெற்றோர்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள வாடி பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில்  நேற்று சிறுமியை அவரது  தாய் அருகில் உள்ள கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

OMG: திருமணம் செய்ய சொன்னது ஒரு குத்தமா….? காதலியை நடுரோட்டில் காலால் உதைத்த காதலன்…. தீயாய் வைரலாகும் வீடியோ…. மாஸ் காட்டிய போலீசார்….!!!!!

பெண்ணை  சரமாரியாக தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தாரா கிராமத்தில் பங்கஜ்  என்ற  வாலிபர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் கடந்த புதன்கிழமை சாலையில்  நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பங்கஜ்ஜிடம்  கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பங்கஜ் அந்த பெண்ணை கீழே தள்ளி தனது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை காரணம் காட்டி!…. யாத்திரையை நிறுத்த பா.ஜ.க முயற்சி செய்கிறது!…. மல்லிகர்ஜூன் கார்கே ஸ்பீச்….!!!!!

கொரோனா எங்குமில்லை, பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜூன் கர்கே கூறியதாவது, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை அரசியல் லாபத்துக்கானது இல்லை. இவை விலைவாசி அதிகரிப்பு, வேலை இல்லா திண்டாட்டம், சீனஊடுருவல்கள் ஆகிய மக்களின் பிரச்சினைகளை எழுப்புவதற்கானது ஆகும். இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் பிரமாண்ட வெற்றி, பாஜகவுக்கு பயத்தை அளித்திருக்கிறது. இதன் காரணமாக கொரோனா பிரச்சினையை எழுப்புகிறது. இந்த யாத்திரையை நிறுத்த […]

Categories
தேசிய செய்திகள்

தம்பதியினரை கொலை செய்த 12 வயது சிறுவன்…. விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்…. போலீஸ் அதிரடி….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் இப்ராகிம் (60)- ஹஸ்ரா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் இப்ராகிம் காசியாபாத்தில் இரும்புக்கடை நடத்தி வந்தார். கடந்த மாதம் 22ஆம் தேதி இப்ராகிம் மற்றும் அவரது மனைவி ஹஸ்ரா கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பணத்திற்காக 12 வயது சிறுவன் கூட்டாளியுடன் சேர்ந்து இப்ராகிம் மற்றும் அவரது மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதாவது, கொலையான தம்பதியினருக்கு 12 வயது சிறுவனை முன்கூட்டியே தெரியும். இதற்கிடையில் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! நேர்மையுடன் செயல்படாத 10 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு…. மாஸ் காட்டும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்….!!!!

மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மத்திய தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி நல்லாட்சி தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேர்மையுடன் பணி செய்யாத 10  அதிகாரிகளுக்கு  கட்டாய ஓய்வு சட்டத்தின் படி ஓய்வு அளிக்க மத்திய அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது உறங்கிய மூத்த பிஎஸ்என்எல் அதிகாரிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

காசு கொஞ்சம் மிச்சமாகும்!…. பயணங்களுக்கு உதவும் வங்கிகளின் கிரெடிட் கார்டுகள்…. அதிரடி சலுகை….!!!!

பயணங்களுக்கு உதவக்கூடிய வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பற்றி நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். HDFC வங்கி HDFC Regalia கிரெடிட்கார்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகல் உடன் வருகிறது. இதன் வாயிலாக இந்தியாவிலுள்ள 12 ஓய்வறைகள் மற்றும் வெளிநாட்டிலுள்ள 6 ஓய்வறைகள் ஒவ்வொரு காலண்டர் ஆண்டும் கிடைக்கும். சில்லறை விற்பனையில் செலவிடப்படும் ரூ.150க்கு நான்கு வெகுமதி புள்ளிகளை அளிக்கிறது. இந்த அட்டையின் ஆண்டு கட்டணம் ரூபாய்.2,500 ஆகும். வருடத்துக்கு ரூபாய்.3 லட்சம் செலவழித்தால் புதுப்பித்தல் கட்டணமானது தள்ளுபடி செய்யப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவுது!… மக்கள் கவனமாக இருங்கள்…. பிரதமர் மோடி அறிவுறுத்தல்…..!!!!

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் இந்த வருடத்தின் கடைசி மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார். அவர் கூறியதாவது “உலக நாடுகளில் கொரோனா அதிகரித்து உள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்கு நாம் கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கழுவவேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளில் உள்ள மக்கள் கொரோனா விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே!…. மிஸ்டுகால் மூலம் வங்கிக்கடன் பெறுவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

நீங்கள் ஒரு விவசாயி எனில், புத்தாண்டுக்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி லோன் தேவைப்படுபவர்கள் வாங்கலாம். PNB-ன் இச்சலுகையை நீங்கள் எளிதாக பயன்படுத்தி விவசாய கடனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக வங்கி பல முறைகளை வழங்கி இருக்கிறது. உங்களது வசதிக்கேற்ப இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் கடன் பெறலாம். கடன் பெறுவது எப்படி..? # நீங்கள் விரும்பினால் 56070 என்ற எண்ணிற்கு “லோன்” என்று எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய ஆசிரியைக்காக…. தொழிலாளி செய்யும் நெகிழ்ச்சியான செயல்…..!!!!!

இஸ்லாமிய ஆசிரியை ஒருவர் விபத்தில் கால்களை இழந்து தவித்து வந்த கண்ணன் என்பவருக்கு ரூபாய்.8 லட்சத்தில் வீடு கட்டி உதவினார். அந்த ஆசிரியைக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக அவர் நலமாக இருக்க வேண்டி சுமார் 300 கி.மீ தூரம் கண்ணன் வீல் சேரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளார். கேரள மாநிலம் மலபுரத்தை சேர்ந்த தொழிலாளி கண்ணன் சென்ற 2013 ஆம் வருடம் லாரியிலிருந்து மரக்கட்டைகளை இறக்கும்போது விபத்து ஏற்பட்டு உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரை வாட்டி வதைக்கும் குளிர்…. மைனஸ் 5.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு…..!!!!

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஒருசில இடங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அத்தகைய இடங்களில் மக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடி குடும்பத்தினரோடு எளிமையான முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்த அடிப்படையில் காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் உறைநிலைக்கு கீழ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. நடப்பு ஆண்டு பதிவானதிலேயே மிகக்குறைந்த அளவு வெப்பநிலை காஷ்மீரில் இப்போது காணப்படுகிறது.  ஸ்ரீ நகரில் நேற்றிரவு வெப்பநிலை மைனஸ் 5.8டிகிரி செல்சியஸ் ஆக […]

Categories
மாநில செய்திகள்

வீரமங்கை வேலுநாச்சியாரின் “வீரத்தை அனைவரும் போற்றுவோம்…. பெருமையுடன் அண்ணாமலை ட்வீட்…..!!!!

வேலு நாச்சியாரின் வீரத்தையும், தியாகத்தையும் அனைவரும் போற்றி வணங்க  வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி வேலு நாச்சியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இன்றும் இவரது நினைவு நாளை முன்னிட்டு  அரசியல் கட்சியினர்  பலர் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “ஆங்கிலேயரின் அடக்குமுறை எதிர்த்து போராடிய பேரரசி வீரமங்கை வேலு […]

Categories
தேசிய செய்திகள்

அட இப்படி ஒரு விதிமுறை இருக்கா?… அந்த டைம்ல ரயில் டிக்கெட் செக் பண்ணக் கூடாது?…. பலரும் அறியாத தகவல்….!!!!

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் மேற்கொள்ளும் நபராக இருந்தால் ஒரு முக்கியமான விதிமுறை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். அதாவது, முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் பயணிகளிடத்தில் TTE இரவு 10 மணிக்குப் பின் ரயில் டிக்கெட்டை செக் செய்ய இயலாது. ஒரு வேளை TTE தொந்தரவு செய்தால், நீங்கள் டிக்கெட் காண்பிக்க மறுக்கலாம். இதையடுத்து உங்களது குழுவுடன் நீங்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டால் இரவு 10 மணிக்கு மேல் ஒருவருக்கொருவர் பேச இயலாது. ஏனெனில் உங்களது உரையாடலின் சத்தம் மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

வேற நம்பருக்கு தெரியாமல் பணம் அனுப்பிட்டீங்களா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!

தவறான யூபிஐ ஐடிக்கு பணத்தை அனுப்பிவிட்டு செய்வதறியாது தவிக்கும் பல பயனர்கள் தற்போதும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால் இனி அதுபோன்ற தவறுகள் எதுவும் நடந்தால் நீங்கள் பயப்படவேண்டிய தேவையில்லை. ஏனெனில் ரிசர்வ் வங்கி உங்களுக்காகவே சில வசதிகளை வழங்குகிறது. இது போன்ற டிஜிட்டல் சேவைகளில் நீங்கள் தவறுதலாக வேறு நபருக்கு பணம் அனுப்பி விட்டால் உடனடியாக அந்த கட்டண முறைக்கு நீங்கள் புகார் அளிக்க வேண்டும். பேடியும், போன் பே, கூகுள் பே ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு…. சிறப்பு ரயில்கள் இயக்கம்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழகம் வழியே தெலங்கானா -கேரளம் இடையில் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வேயானது ஏற்பாடு செய்து உள்ளது. இதற்குரிய முன்பதிவு இன்று (டிச.25) காலை 8 மணிக்கு துவங்கியது. அந்த வகையில் ஹைதராபாத்திலிருந்து டிச.,29 ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் டிச.,31 ஆம் தேதி அதிகாலை 3:50 மணிக்கு கோட்டயம் வந்து சேரும். மறு மாா்க்கமாக டிச.,.31 ஆம் தேதி இரவு 10:50 மணிக்கு கோட்டயத்திலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அலுவலர் வீட்டில் நடந்த நூதான திருட்டு…. போலீசார் தீவிர விசாரணை….!!!!!

ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரியின் வீட்டில் திருடிய 2  பெண்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு வந்த 2  பெண்கள் தங்களை  வீட்டு வேலைக்கு சேர்த்து கொள்ளுமாறு  கூறியுள்ளனர். மேலும் உங்கள் வீட்டை சுத்தம் செய்து காட்டுகிறோம். பிறகு எங்களை வேலைக்கு சேர்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள் என கூறியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு வீடியோ: பெண்ணை சரமாரியாக அடித்து… நடுரோட்டில் மயக்க நிலையில் விட்டுச் சென்ற காதலன்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

மத்தியப்பிரதேசம் ரேவா மாவட்டத்தில் காதலியை தாக்கி சாலையில் மயக்க நிலையில் சுயநினைவின்றி விட்டுச் சென்ற காதலனையும், அவனது கூட்டாளியையும் காவல்துறையினர் கைது செய்தனர். மவுகஞ்ச் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்ற 21ஆம் தேதி இந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. அதுகுறித்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வீடியோவில் அந்த நபர் பெண்ணை கொடூரமாக அடித்து கீழே தள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் அந்த பெண் மயக்கமடைந்தார். அப்போது அந்த […]

Categories
தேசிய செய்திகள்

கோடியில் ஒருவருக்கு தான் அப்படி இருக்கும்!…. வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…..!!!!

ஜார்க்கண்ட் மாநிலம் குட்டா மாவட்டத்தில் வாலிபர் ஒருவருக்கு வெகு நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து பல முறை இந்த சோதனையை செய்த பின், வாலிபருக்கு ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் சிறு வயதிலிருந்தே அப்படி உள்ளது எனவும் மருத்துவர்கள் அவரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

நடைப்பயணம் பற்றி கவலைப்பட எதுவுமில்லை!… ராகுல்காந்தி எப்படி பிரதமராக முடியும்?…. மத்திய மந்திரி பேச்சு….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மத்திய மந்திரியான ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பதாவது “நமது நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ராகுலுக்கு ஒரு போதும் கிடைக்காது. வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள் 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றியடைந்தால், ராகுல்காந்தி எப்படி பிரதமராக முடியும்..? ஆகவே 2024-ல் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது 40 இடங்களுக்கு மேல் பெறாது. ராகுல்காந்தியின் நடைப்பயணம் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. நாங்கள் எதற்காக பயப்படவேண்டும்?. […]

Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி!…. 6,017 பறவைகள் கொல்லப்பட்டது…. மாவட்ட நிர்வாகம் தகவல்…..!!!!

கேரளா கோட்டயம் மாவட்டத்திலுள்ள 3 பஞ்சாயத்துகளில் பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து அங்கு 6,000 பறவைகள் அழிக்கப்பட்டது. பறவைக் காய்ச்சல் பறவைகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றக்கூடிய ஒரு வகை நோய் ஆகும். கோட்டயம் மாவட்டத்தின் வேச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை ஊராட்சிகளில் நேற்று மொத்தம் 6,017 பறவைகள் கொல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதில் வெச்சூரில் 133 வாத்துகளும், 156 கோழிகளும், நெண்டூரில் 2,753 வாத்துகளும், ஆர்ப்பூக் கரையில் 2,975 வாத்துகளும் கொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி கேரளாவில் […]

Categories
தேசிய செய்திகள்

NPS திட்டத்தில் மாதம் ரூ,70,000…. எவ்வளவு முதலீடு தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

தேசிய ஓய்வூதிய முறை(NPS) என்பது முதலீட்டு வரம்பில்லாத மிகவும் பிரபலமான ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 70,000 ஓய்வூதியமானது கிடைக்கும். மேலும் 1 கோடிக்கும் மேற்பட்ட தொகை கிடைக்கும். இதில் 18 -70 வயது வரை உள்ள அனைவரும் முதலீடு செய்யலாம். மேலும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இருவரும் முதலீடு செய்து கொள்ளலாம்.  NPS கணக்கீட்டின் அடிப்படையில் 28 -60 வயது வரை மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!… இனி இதெல்லாம் அவசியம்?…. தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இப்போது வைகுண்ட ஏகாதசி துவங்கி இருப்பதால், வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். இந்த நிலையில் சீனாவில் புது வகை கொரோனா பரவல் உலகளவில் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருமலை தேவஸ்தானம் கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைபடுத்த தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் வருகிற ஜனவரி 1-11 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: 4-வது மாடியிலிருந்து குதித்த மாணவி…. நடந்தது என்ன?…. வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

டெல்லியின் முகர்ஜி நாகர் பகுதியில் வசித்து வரக்கூடிய கல்லூரி மாணவிக்கு, டேட்டிங் ஆப் வாயிலாக ஒரு இளைஞர் அறிமுகமாகி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இந்த நிலையில் தன் வீட்டிற்கு வருமாறு கல்லூரி மாணவியிடம் இளைஞர் கேட்டுக்கொண்டார். அதன்படி கல்லூரி மாணவி அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு இளைஞர் தன் நண்பர்கள் உடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்ததாகவும், மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவியை இளைஞர்களின் நண்பர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!…. நாட்டில் ஊரடங்கு தேவையா?…. மருத்துவர் கொடுத்த விளக்கம்…..!!!!!

இந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரத்தால் சர்வதேச விமானங்களை தடைசெய்யவோ (அ) ஊரடங்கு விதிக்கவோ தேவையில்லை. எனினும் சில நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருதி பலப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு தேவை என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில் இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், புதியதாக கொரோனா அலை மற்றும் தொற்று பாதித்தோர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது சாத்தியமில்லை என்றும் நிபுணர்கள் கூறினர். இதுகுறித்து எய்ம்ஸின் முன்னாள் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா செய்தியாளர்களிடம் பேசியதாவது […]

Categories
தேசிய செய்திகள்

இவர் மக்களை பற்றியும் யோசிக்க வேண்டும்…. ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டிய மத்திய மந்திரி…. எதற்கு தெரியுமா….?

ராகுல் காந்தி மீது மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி இந்தியாவின் ஒற்றுமைக்காக கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையை தொடங்கினார். இது கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடந்து தற்போது நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரைக்கு நாளுக்கு நாள் மக்களின் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல நிறுவனத்தை வாங்க பிளான் போடும் கூகுள்?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

பொழுதுபோக்குக்காக சமூகவலைத்தளங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு சீனாவின் டிக்டாக் செயலி அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து அதில் வரம்பு மீறி வீடியோக்களை வெளியிடுவதாகவும், இதனால் இளைய சமூகத்தினர் தவறான பாதையில் செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதி இந்திய அரசு டிக்டாக் செயலியை தடைசெய்தது. அதன்பின் Sharechat செயலி அதிகளவு பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அதிக முதலீடுகள் Sharechat மீது குவிந்து வருகிறது. இப்போது 650 மில்லியன் டாலர் மதிப்பில் நிறுவனம் […]

Categories

Tech |