அரியலூர் மாணவி மரணத்திற்கு மதமாற்றம் காரணம் என்று தேசிய குழந்தைகள் நல ஆணைய விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. உரிய பதிவு இல்லாமல் செயல்பட்டதற்கான பள்ளி மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு மனநல ஆலோசனை, நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்துள்ளது.
