திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இதுவரை 11 தெருக்களுக்கு “சீல்” வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளை சுகாதாரத்துறையினர் “சீல்” வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள ராஜீவ்காந்தி தெரு, மேட்டுப்பாடி ரோடு, எம்.டி.எஸ். காலனி, அழகர் தெரு ஆகிய தெருக்களில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சுகாதாரத் துறையினர் அந்த தெருக்களை தகரத்தால் அடைத்து “சீல்” வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து […]
