20 ஓவர் உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி காக் திடீரென விலகினார். துபாயில் நடைபெற்ற போட்டியில் தென் ஆபிரிக்கா அணி வெற்றி பெற்றது. அந்த போட்டி தொடங்கும் முன்பு நிறவெறி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் முட்டியிடுவார்கள் என போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே குயின்டன் டி காக் திடீரென விலகினார்.
