தென்னை நாற்றுப்பண்ணையில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட எஸ்.வி மங்கலம் ஊராட்சியில் தென்னை நாற்றுப்பண்ணை வேளாண்மை துறையின் மூலம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்து அங்கு வளர்க்கப்படும் தென்னை ரகங்களை பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது இந்த அரசு பண்ணையில் பயிரிடப்படும் தென்னங்கன்று இரகங்கள் வாரியாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது எனவும் தென்னை வளர்ச்சி […]
