இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதுகுவலி காரணமாக விராட்கோலி விலகிய நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 50 ரன்னும், அஸ்வின் 46 […]
