தாய் தனது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பரும்பு வேம்படி பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மூன்றரை வயதுடைய கலைமதி, அன்னலட்சுமி, என்ற இரட்டைக் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பார்வதியின் அண்ணன் மகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனால் பார்வதி தனது கணவரிடம் மருத்துவமனைக்குச் சென்று தனது அண்ணன் மகளை பார்த்து வருவதாக […]
