சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மகாராஜா என்பவர் வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜீவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். மகாராஜாவின் மனைவி ஜீவா தற்போது கர்ப்பமாக உள்ளார். திருவான்மியூரில் பிரபல ரவுடி ஓலை சரவணன் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு மகாராஜா சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அந்த சமயம் ஜீவா தனது […]
