திருமணத்திற்கு வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. துமகூரு மாவட்டம் கோரட்டகெரே தாலுகா தூவினக்கெறே கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமந்ராஜ். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த பூமிகா என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அனுமந்த் ராஜ் கடந்த சில நாட்களாக பூமிகா உடன் சரியாக பேசவில்லை என்றும், சோகமாக காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அனுமந்த் ராஜ் திடீரென்று தூக்கு […]
