கை, கால்கள் கட்டப்பட்டு லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திற்கு சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தென்காசியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து அந்த சிமெண்டு மூட்டைகளை சவுதாபுரத்தில் உள்ள தனியார் குடோனில் இறக்கிவிட்டு அங்கேயே தூங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் லோடு ஏற்றும் பகுதிக்கு பின்புறம் மகேந்திரன் அவர் கட்டிருந்த லுங்கியில் […]
