ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்காக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். கடலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, உடற்கல்வி அலுவலர் […]
