வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம், ஔவையார் தெருவில் வசித்து வரும் பரமேஸ்வரன்(37) மனைவி சீதாலட்சுமி. பரமேஸ்வரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்திருந்தார். அச்சமயம் பரமேஸ்வரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சீதாலட்சுமி அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பரமேஸ்வரனை அழைத்து சென்றார். பின் அவர்கள் சிகிச்சை பெற்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பினர். […]
