இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி துப்புரவு ஆய்வாளர் உயிரிழந்த நிலையில் வாலிபர் படுகாயம் அடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வசித்து வந்த பாலு (32) சேந்தமங்கலம் பேரூராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சண்முகவடிவு (46) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பாலு நாமக்கல் சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அக்கியம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த வடுகப்பட்டியை சேர்ந்த கமல்நாத்(19) […]
