ஈரானின் தெற்கு பகுதியில் தொடர்ந்து இரண்டு முறை மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் தெற்கு பகுதியில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியிருப்பதாக ஐரோப்பிய மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையமானது தகவல் தெரிவித்திருக்கிறது. ஹோர்மோஸ்கன் என்னும் மாகாணத்திலிருக்கும் பந்தர் அப்பாஸ் என்ற துறைமுகப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், துபாய் வளைகுடா பகுதிகளிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு, தெற்கு பகுதிகளிலும் அதற்கான அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
