துபாய் நாட்டில் அல்- பர்ஷா பகுதியில் முக்கிய சாலையின் மையப்பகுதியில் வங்காள தேச நாட்டைச் சேர்ந்த ஒருவர் காரை நிறுத்தியுள்ளார். அதன் பின் திடீரென அந்தக் காரை பின்னோக்கி செலுத்தியுள்ளார். இதில் மற்றொரு காரில் வந்த இந்தியர் ஒருவர் அதனை கவனிக்காமல் வந்து அந்த கார் மீது மோதியுள்ளார். இதனையடுத்து இரண்டு கார்களும் மற்றொரு கார் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். […]
