துனிசிய அதிபர் கயீஸ் நாடாளுமன்றத்தை முடக்க முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி பதவி நீக்கம் செய்யப்படுவதாக பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். துனிசிய பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி அந்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராத காரணத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் அந்நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட காரணத்தினால் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும் இளைஞர்களும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினருக்கும், […]
