திண்டுக்கல் கொடைக்கானலில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் துணை ராணுவப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள […]
