தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசினார். சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை அதிமுகவில் வெடித்திருக்கின்றது . சில நாட்களுக்கு முன் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையே காரசார விவாதம் நடந்தது என்றும் கூறப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக சொந்த ஊரில் இருந்து சென்னை வந்த ஓபிஎஸ் தற்போது மீண்டும் தேனி திரும்பியுள்ளார்.சென்னையில் […]
