கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் குழித்துறை வாவுபலி திடல் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் ஒருவர் பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பதும், மற்றொருவர் மார்த்தாண்டத்தில் துணிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பதும் தெரியவந்தது. இருவரும் இணைந்து 300 கிராம் போதை […]
