பொள்ளாச்சியில் தனிப்படை போலீஸாருக்கு வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். கோவையில் சென்ற 22ஆம் தேதி பாரதிய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகளின் வீடு உடைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டது. இதனால் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதனிடையே பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. […]
