வயிற்றுவலி குணமடையாததால் விரக்தியடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த தங்கேஸ்வரன் என்பவருக்கு சுபத்ரா(28) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுபத்ரா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சுபத்ரா வீட்டில் தனது அறையில் வைத்து திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
