தமிழகத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அதில் 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இது தவிர பெட்ரோல் […]
