தீப்பெட்டி தொழிற்சாலை மேற்பார்வையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அப்பாவு நகர் பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பாப்பாரப்பட்டி பகுதியில் வசிக்கும் பூர்ணிமா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது பூர்ணிமா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் கார்த்தி மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]
