உலக நாடுகள் முழுக்க புத்த பூர்ணிமா தினம் பௌத்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. பௌத்த மதத்தைச் சேர்ந்த மக்கள் மே மாதத்தில் பௌர்ணமி நாளன்று புத்த பூர்ணிமாவை கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்த நாளை முன்னிட்டு தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கிற்கு அருகில் தாமக்யா விகாரை விளக்கின் ஒளி ஜொலிக்கிறது. சுமார் 2.10 லட்சம் எல்இடி விளக்குகளை வைத்து, புத்தரையும் அவரின் போதனைகளையும் விளக்கக்கூடிய காட்சிகளை அழகாக ஒளிரச்செய்துள்ளனர். மேலும், வெள்ளை நிற ஆடைகளுடன் பவுத்த மதத்தை சேர்ந்த பலரும் […]
