புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இடையூர் பகுதியில் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு இரட்டை குவளை முறை, கோவில்களுக்கு செல்ல அனுமதிக்காது போன்ற தீண்டாமை முறைகள் வழக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக நீதிபதிகள் முறையாக மனு தாக்கல் செய்தால் […]
