கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதி அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனையும் அப்போது மூடப்பட்டது. தற்போது கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதியன்று திறக்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் […]
