மங்களூரில் உள்ள திரையரங்கில் “காந்தாரா” படம் ஓடிக்கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் விசித்திரமாக நடந்து கொண்டார். கன்னடத்தில் இயக்குனர் பிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியான “காந்தாரா” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வசூல் ரீதியாகவும் “காந்தாரா” படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். […]
