மேற்குவங்காளத்தில் தடையை மீறி பேரணி சென்ற போது போலீசாருடன் பாரதிய ஜனதா கட்சியினர் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மம்தா பானர்ஜி ஆட்சியில் அரசியல் கொலைகள் அதிகம் நடப்பதாகவும் குறிப்பாக பாரதிய ஜனதாவினர் கொல்ல படுவதாகும் அக்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை கண்டித்து ஹௌராவில் உள்ள தலைமை செயலகம் நோக்கி கண்டனப் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. […]
