திருச்சி ஏர்போர்ட்டில் வைத்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்ற முத்துப்பேட்டை வாலிபரை கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகரில் வசித்து வருபவர் பக்கிரி முகமது. இவருடைய மகன் 37 வயதுடைய முகமது யூசுப். இவர் கடந்த 2005ஆம் வருடம் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கத்தார் நாட்டிற்கு தப்பித்து சென்றார். அதன்பின் திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் முகமது யூசப்பை பிடிக்க வாரண்டு பிறப்பித்தது. இதனையடுத்து […]
