Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கோர்ட்டில் ஆஜராகாமல்…. “வெளிநாட்டிற்கு தப்பிய வாலிபர்”… ஏர்போர்ட்டில் வைத்து தூக்கிய போலீஸ்..!!

திருச்சி ஏர்போர்ட்டில் வைத்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்ற முத்துப்பேட்டை வாலிபரை கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகரில் வசித்து வருபவர் பக்கிரி முகமது. இவருடைய மகன் 37 வயதுடைய முகமது யூசுப். இவர் கடந்த 2005ஆம் வருடம் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கத்தார் நாட்டிற்கு தப்பித்து சென்றார். அதன்பின் திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் முகமது யூசப்பை பிடிக்க வாரண்டு பிறப்பித்தது. இதனையடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் ஆடு மேய்க்க வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து  சங்கர் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சங்கரை  காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!

மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூன்றாம்சேத்தி   கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில்  மின்மாற்றி மற்றும் மின்சாதனங்கள் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ளது.  இதனால் கடந்த 3 நாட்களாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின்தடையால் 10 மற்றும் 12-ஆம்  வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை” பெண்ணின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயமாலினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயமாலினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயமாலினி கடந்த 20-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமாலினியின் சகோதரர் கேசவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் …. கடித்து குதறும் வெறிநாய்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

வெறி நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அதங்குடி பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்வதற்காக வீடுகளில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வயலுக்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்கள்  தொடர்ந்து கடித்து வருகிறது. அதேபோல் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற ஏராளமான ஆடுகளை நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 7 ஆடுகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற குருவார பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

குருபகவான் கோவிலில் வியாழக்கிழமையை  முன்னிட்டு குருவார பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் குரு வார  வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று வியாழக்கிழமையை  முன்னிட்டு குருவார வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில்  கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான்   ஆகியோருக்கு  பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கடலுக்கு சென்ற மீனவர்” திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  கீழவாடியக்காடு  பகுதியில் மீனவரான சந்திரசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று சந்திரசேகரன் முன்னாங்காடு துறைமுகத்திலிருந்து மீனவர்களுடன்  மேல கடைசி  தீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென சந்திரசேகரன் படகில் இருந்து  தவறி கடலில் விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தம்பியின் வெறிச்செயல்…. அதிரடி உத்தரவிட்ட நீதிபதி….!!!!

அண்ணனை கொலை செய்த தம்பிக்கு  ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் ஏத்தக்குடி கீழகுடியிருப்பு பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற அண்ணன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் கடந்த  2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ஆம் தேதி தனது மனைவியிடம் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் தட்டிக்கேட்டுள்ளார் . இதனால் ஆத்திரம் அடைந்த  விஜயகுமார் வீட்டில் இருந்த இரும்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. லேட்டா வந்தது தப்பா…. மனைவி, மகளை பிளேடால் தாக்கிய கணவர்…!!!!

மனைவி மற்றும் மகளை தாக்கிய  நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூவாநல்லூர் ஜெயந்தி காலனி பகுதியில் தனபால்-சாரதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தீபா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தீபாவின் கணவர் கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தீபா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தீபா வேலைக்கு சென்றுவிட்டு இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனபால் தீபாவிடம் தகராறு செய்துள்ளார். மேலும் தனபால்  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நடுவச்சேரி பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர்  வாலிபரின்  சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…. !!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் கடை வீதி தெருவில் கொரடாச்சேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில்  நின்ற வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த  விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சகார்தாஸ்  என்பதும் சட்டவிரோதமா  கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!

வருமுன் காப்போம்  மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் “வருமுன் காப்போம்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், எம் .பி செல்வராஜ்,  உதவி திட்ட அலுவலர் ரத்தினகுமார், நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ் செல்வன், வலங்கைமான் ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பரசன், அரசு அலுவலர்கள், டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் எம்.பி. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. புளிய மரத்தின் மீது மோதிய கார் “2 பேர் படுகாயம்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 மரத்தின் மீது கார் மோதிய  விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பூக்கொல்லை பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் சாலை ஓரம் அமைந்துள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சலாமத்துநிஷா, ஹர்சத்  ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற பூஜைகள்….!!!!

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூவனூரில் பிரசித்தி பெற்ற சதுரங்கவல்லபநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  வீற்றிருக்கும்  சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது  வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை  முன்னிட்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில்  பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம்  உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நிழல் இல்லாத நாள்”… நடைபெற்ற அறிவியல் விழிப்புணர்வு… விளக்கம் அளித்த துணை தலைவர்…!!!!

மாணவர்களுக்கு நிழல் இல்லாத நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி காந்தி சிலை முன்பு வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் “நிழல் இல்லாத நாள்” குறித்து அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை தலைவர் அன்பரசு தலைமையில் நடைபெற்றது. இதில்  ஆசிரியர் எழிலரசி, கிளையின் பொருளாளர் பாஸ்கரன், அறிவியல் இயக்கத்தின் மாநில துணை தலைவர் சேதுராமன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பக்தவச்சல பெருமாள் கோவில்…. நடைபெற்ற தேரோட்டம் …. தீவிர பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!!!

பிரசித்தி பெற்ற  பெருமாள் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கை பகுதியில் மிக பழமையான   பக்தவத்சல   பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான   நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பக்தவச்சல பெருமாள், சீதேவி மூதேவி நாச்சியாருடன் சிறப்பு தேரில் எழுந்தருளினார். இந்த தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற சந்தன ராமர் கோவில்…. நடைபெற்ற வெண்ணெய்த்தாழி திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

சந்தன ராமர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சந்தனராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று  வெண்ணெய்த்தாழி உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் சீதா, லட்சுமணன், அனுமன் சமேத சந்தனராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“வெளுத்து வாங்கிய மழை” அடியோடு சரிந்து பயிர்கள்…. வேதனையில் விவசாயிகள் ….!!!!

பெய்த கனமழையால் உளுந்து  பயிர்கள் சேதமடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தற்போது  3 ஆயிரம்  ஏக்கர் பரப்பளவில் கோடை கால  பயிரான உளுந்து, பச்சை பயிர் போன்றவற்றை சாகுபடி செய்தனர். இந்த பயிர்கள் இன்னும் சிறிது நாட்களில்  அறுவடை செய்ய தயாரான நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் பயிர்கள் வயலில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நீங்களும் கலந்து கொள்ளலாம்” நடைபெறும் லட்சார்ச்சனை விழா …. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

குருபகவான் கோவிலில் 2-ஆம்  கட்ட லட்சார்ச்சனை நாளை தொடங்குகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குரு பகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 14-ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு முதற்கட்ட லட்சார்ச்சனை விழா கடந்த 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  வேலு என்ற  மகன் இருந்துள்ளார்.இந்நிலையில் வேலு  வேலைக்கு சென்றுவிட்டு மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.  அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி வேலுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்று திருக்கல்யாண வைபவம்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

பிரசித்தி பெற்ற கோதண்டராமர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ராம நவமியை முன்னிட்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று  யானை வாகனத்தில் கோதண்டராமரையும், அன்னவாகனத்தில் சீதாதேவியும் எழுந்தருள செய்து வீதிஉலா நடைபெற்றது. இதனையடுத்து சாமிகளுக்கு  பல்வேறு வகையான […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு வலி தாங்க முடியல” வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழவிடையல்  கிராமத்தில் கூலி தொழிலாளியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் திடீரென  வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த  ரவிச்சந்திரன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ரவிச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்…. நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!

நடைபெற்ற நேர்காணல் முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தென்காரவயல் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் சோ.செந்தமிழ்செல்வன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி திட்ட முகாமை இயக்குனர் தெய்வநாயகி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஷீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த  முகாமில் வடகரைவயல், கானூர், பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த  பொதுமக்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள் …. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

பிரதோஷத்தை முன்னிட்டு  அபிமுக்தீஸ்வரர்  கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற  அபிமுக்தீஸ்வரர் சாமி  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் அபிதகுஜலாம்பாள் சமேத அபிமுக்தீஸ்வரர்  மற்றும்  நந்திகேஸ்வரருக்கு  பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் பரபரப்பு!!…. அம்பேத்கரின் பிறந்தநாள் விழா” திடீரென வாலிபருக்கு நடந்த கொடூரம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் இந்திரா நகரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் இளம் சிறுத்தை பாசறையின் ஒன்றிய துணை செயலாளரான சின்னத்துரை என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரை அதே பகுதியில் நடைபெற்ற அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சியினருடன் சேர்ந்து பேனர் அமைக்கும்   பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென  மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சின்னத்துரை  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் 108 லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய  விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதிமங்கலம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  சுபபாரதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுபபாரதி தனது தோழி  ஜெனித்தாவுடன்  சேர்ந்து திருவாரூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் நிலைதடுமாறி சுபபாரதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2  பேரையும் அருகில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இத பார்த்தா சந்தேகமா இருக்கு” ஊழியர் அளித்த தகவல்…. கும்பலோடு தூக்கிய போலீஸ்….!!!!

கள்ள நோட்டு விற்பனை செய்ய முயன்ற 4  பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளமல் பகுதியில் டாஸ்மார் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்கு வந்த அருள் என்பவர் மது பாட்டிலை வாங்கி விட்டு 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர்  உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அருளை பிடித்து விசாரணை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த கோர விபத்து…. போலீஸ் விசாரணை….!!!

மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மானாநல்லூர் கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென  மகேந்திரனின் மொபட் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஆடம்பரமாக நடைபெற்ற பேரனின் பிறந்தநாள்” பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடும்ப பிரச்சனையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேதிபுரம் கிராமத்தில் முதியவரான  ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெயராமன் தனது பேரனின் பிறந்தநாளை அதிகமாக செலவு செய்து கொண்டாடியுள்ளார். இந்நிலையில்  ஜெயராமனுக்கும் அவரது மகன்  கலைச்செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயராமன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு வலி தாங்க முடியல” கூலி தொழிலாளியின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் கூலி தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக  வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மறுபடியும் வெங்கடேசனுக்கு  வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கியநிலையில் இருந்த வெங்கடேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“10 அம்ச கோரிக்கைகள்” சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு ….!!!!

சத்துணவு ஊழியர்கள்  சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள்  சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்க ஒன்றிய தலைவர் சகிலா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் 9 ஆயிரம்  ரூபாய் ஓய்வூதியமாக  வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பது போல சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்….. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நண்பனின்  தாயை தாக்கிவிட்டு நகையை திருடி  சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளைகுப்பம் பகுதியில் மலர் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மலர் வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி கொண்டிருந்தார்.அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்  மலரை தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த மலரை செந்தில்குமார் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற தம்பதி….வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி….தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதி கிராமத்தில் சதாசிவம்-பிரேமாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சிக்கு  சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகை மற்றும்  30 ஆயிரம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிறவி மருந்தீஸ்வரர் கோவில்…. நடைபெறும் திருவிழா….குவியும் பக்தர்கள் கூட்டம்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள்  நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சுவாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு  தீபாராதனைகள் நடைபெற்றது. அதன் பின்னர் பூத வாகனத்தில் சுவாமி எழுந்தருளி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ராம நவமியை முன்னிட்டு நடைபெறும் திருவிழா…. கலந்துகொண்ட பக்தர்கள்….!!!

ராஜகோபாலசுவாமி திருக்கோவில் திருவிழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏத்தகுடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும்  ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த  விழாவை மன்னார்க்குடி   பிரசன்னா தீட்சிதர் கலந்துகொண்டு கருட சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை  ஏற்றிவைத்தார். அதன்பின்னர் சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மனைவி இறந்த துக்கம்” கணவன் எடுத்த விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குருங்குளம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவியான சாந்தா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ஆறுமுகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ எனக்கு வலி தாங்க முடியல” வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி கிராமத்தில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷுக்கு  அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது.  இதனையடுத்து   நேற்று  மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சந்தோஷை  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. வீட்டுக்குள் நுழைந்த “5 அடி நல்ல பாம்பு” வனத்துறையினரின் செயல்….!!!

வீட்டுக்குள் புகுந்த பாம்பை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் பிடித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அலுவலர் தாஹிர் அலி, வனவர் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  வீட்டில் நுழைந்த பாம்பை  நீண்ட  நேரம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கொழுந்துவிட்டு எரிந்த வீடுகள்” பேரதிர்ச்சியில் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை….!!

வீடுகளில் பற்றி  எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் ஆற்றங்கரை ஓரமாக 3 குடிசை வீடுகள்இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இப்படி தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” ஆய்வு செய்து ஜ.ஜி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன்  நேரில் சென்று  ஆய்வு செய்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லத்துரை, போலீஸ் அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“1 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள்” ஆய்வு செய்த டி. ஐ. ஜி. கயல்விழி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

சரக டி.ஐ.ஜி. கயல்விழி அனைத்து காவல் நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து வழக்குகள் குறித்து வருடாந்திர ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டி.ஜ.ஜி கயல்விழி, மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், மன்னார்குடி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் டி.ஐ.ஜி. கயல்விழி மன்னார்குடி, நீடாமங்கலம், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

4 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்க வேண்டும்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதிமங்கலம் கோம்பூர் கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு   சரண்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரன்ராஜ் அதே பகுதியில் தனது பெற்றோருடன்  வசித்து வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் பரபரப்பு…. பெண் தற்கொலை”வெளியான பல உண்மைகள்” பேரதிர்ச்சியில் பெற்றோர்….!!

பெண்ணை கர்ப்பமாக்கி தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவநாதபுரம் பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஆர்த்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆர்த்தி கடந்த 5-ஆம்  தேதி வீட்டில் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்த்தியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆர்த்திக்கும்  கருப்பூர் பகுதியை சேர்ந்த சாவித் என்பவருக்கும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு” இந்த தலைப்புகளில் தான் போட்டிகள் நடைபெறும்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் காந்தியடிகள், நேரு, அம்பேத்கார், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின்  கருத்துக்கள் மற்றும் சமூக சிந்தனையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில்  பேச்சுப்  போட்டிகள் நடைபெறுகிறது. இதனையடுத்து  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. குருவார வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

குரு வாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குருபெயர்ச்சி, வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல்  நேற்று குருவார வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர  ஆகியோருக்கு பால், தயிர் , இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆட்டோ….. பறிபோன சிறுவர்களின் உயிர்…. போலீஸ் விசாரணை….!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய  விபத்தில் 2 சிறுவர்கள்  உயிரிழந்த  சம்பவம்  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கல்விக்குடி  கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய  பசுபதீஸ்வரன்  என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பசுபதிஸ்வரன் தனது நண்பர்களான தீபன் , கலையரசன், ராகவன்  ஆகியோருடன் சேர்ந்து கோவிந்தகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ நிலைதடுமாறி  மோட்டார் சைக்கிள்கள்  மீது பலமாக மோதியது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்” நடைபெற்ற அறிவியல் கண்காட்சி…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!

 மாவட்ட அளவிலான அறிவியல்  கண்காட்சி நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலுடையார் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து  மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த கண்காட்சியானது மாணவர்களின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. ம.தி.மு.க.வினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

ம.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையம் முன்பு ம.தி.மு.க. இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட  செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும். முனைவர் பட்ட மாணவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிக்கக்கூடாது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன், நாகை தமிழ்ச்செல்வன், துரைசிங்கம், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்…. நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்ப்பு  நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், வருவாய் அலுவலர் சிதம்பரம், வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் ஹேமா நிர்மலா, விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் கூட்டத்தை நடத்த வேண்டும். மேலும்  வல்லக்கோட்டை ஆற்றில் உள்ள […]

Categories

Tech |