Categories
மாநில செய்திகள்

Breaking: இந்த 2 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!!

ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலி…. நாளை (27ஆம் தேதி) 11 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. நாளை (27ஆம் தேதி) 9 மாவட்டங்களில் விடுமுறை.!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், தஞ்சை, […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தான ரோட்டில் தள்ளாடும் குடிமகன்கள்…. இவர்களின் ஆதங்கம் என்ன தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்ததால் பல்வேறு அணைகள் நிரம்பி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை குறைந்தாலும் வெள்ள நீர் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் மது பிரியர்கள் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அவை என்னவென்றால் திருவள்ளூர் அருகே கனமழை பெய்ததால் அங்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதைத்தாண்டி ஆபத்தான முறையில் மதுபான கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால், அந்தப் பகுதியில் சாலை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளம் ரொம்ப வந்துடுச்சா…! நடந்தே சென்று பார்வையிட்ட முதல்வர்…. மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் ..!!

உபரி நீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளம் சூழ்ந்த மணலி மற்றும் புறநகர் பகுதிகளை நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 30 ஆயிரம் கன […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திருவள்ளூரில் நிவாரண முகாம்களாக செயல்படும்… பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போதிலும் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு… விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்…!!! 

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட்அலர்ட் திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது:” குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை விலக்கப்பட்டு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி- சென்னைக்கு இடையே வடதமிழகம் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா பகுதியில் நாளை கரையை கடக்கும்” எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. அவதிக்குள்ளான பொதுமக்கள்….!!

தண்டவாளத்தில் மரம் சாய்ந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு பாதிப்படைந்தது. திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் அருகே நின்று கொண்டிருந்த இலவ மரம் தொடர் மழை காரணமாக  நேற்று காலை 8 மணியளவில் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. மேலும் மரம் சாய்ந்து விழுந்ததில் ரயில்வே மின்கம்பிகள் அறுந்து தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நிலையம் செல்லும் ரயில் போக்குவரத்து சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இது குறித்து அறிந்த திருவள்ளூர் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : சற்றுமுன்… இந்த 4 மாவட்டங்களுக்கு நாளை (13ஆம் தேதி) விடுமுறை!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (13ஆம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர், சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. இது தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.. கன மழையால் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

#BREAKING : இந்த 3 மாவட்டங்களில் நாளை (13ஆம் தேதி) விடுமுறை!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. சற்று முன்னதாக தான் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.. கன மழையால் […]

Categories
கடலூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை விழுப்புரம் வேலூர்

நாளை (நவ.12)…. 10 மாவட்டங்களுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7  மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

FLASH : நாளை (12ஆம் தேதி)… இந்த 9 மாவட்டங்களுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் நாளை 9 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) […]

Categories
கடலூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம் வேலூர்

கனமழை… நாளை (12ஆம் தேதி) இந்த 7 மாவட்டங்களுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை  விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை மழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை (12ஆம் தேதி)… இந்த 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கன மழை தொடர்ந்ததால் 4  மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது.. இதனால் ஆங்காங்கே பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.. பல்வேறு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த 4 மாவட்டங்களில்…. நவ., 10, 11 இல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?… வெளியான தகவல்!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 இல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் அங்கு செல்கிறாய்…..? மனைவியை கட்டையால் தாக்கி கொன்ற கணவர்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

குழந்தைகளை கவனிக்காமல் கோவிலுக்கு சென்றதால் மனைவியை கணவர் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் சென்னை துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு புவனா ஸ்ரீ மற்றும் சஞ்சய் ஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவரிடம் கூறாமலும், குழந்தைகளை கவனிக்காமல் அடிக்கடி கோவிலுக்கு சென்ற செல்வியை சந்திரமோகன் கண்டித்துள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடல் முழுவதும் கொட்டிய பால்…. வலியில் துடித்த 1 வயது குழந்தை…. திருவள்ளூரில் நடந்த சோகம்…!!

சூடான பால் உடலில் கொட்டியதால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சங்கரணை கிராமத்தில் ரவி-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவருக்கு ஒரு வயதுடைய காசியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா தனது குழந்தைக்காக பாலை காய்ச்சியுள்ளார். அதன் பின் பாலை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துள்ளார். இதனையடுத்து யாரோ அழைத்தது போல சத்தம் கேட்டதால் சங்கீதா வாசலுக்கு சென்று பார்த்துள்ளார். இதற்கிடையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கண் விழித்து […]

Categories
மாநில செய்திகள்

WOW: இதை செய்தால் ரூ.1000 பரிசு… சூப்பர் அறிவிப்பு … நீங்க ரெடியா?….!!!

கொரோனா விழிப்புணர்வை மேற்கொள்ளும் வகையில் முகக்கவசம் மற்றும் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு மீம்ஸ் போடுபவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்படும். மீம்ஸ்களை பதிவிடவேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 18. மீம்ஸ் பதிவிடுபவர்கள் @Thiruvallurcollr-ஐ டேக் செய்ய வேண்டும்  என தெரிவித்துள்ளார்.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? ரவுடிக்கு நடந்த கொடூரம்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!

ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக சோழவரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பொன்னேரி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணம்…. உறவினர்கள் அளித்த புகார்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை….!!

தவறான சிகிச்சை அளித்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு வனிதா என்று மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வனிதா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றுள்ளார். இதனையடுத்து வனிதா இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி வனிதா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென வனிதா மாரடைப்பு ஏற்பட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இன்னும் அவன் வெளிய வரல” நண்பர்கள் தெரிவித்த தகவல்…. திருவள்ளூரில் நடந்த சோகம்….!!

ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் ராகுல் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராகுல் தனது நண்பர்களுடன் சோழவரம் பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஏரியில் குளித்த ராகுல் நீண்ட நேரமாகியும் கரை திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக சோழவரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“அங்கேயும் இப்படியா நிக்கிறது” அனுமதியில்லாமல் செய்த செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவள்ளுவர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் விவசாயிகள்  உரிய அனுமதியின்றியும் கொரோனா இடைவெளியை பின்பற்றாமலும் கலந்துகொண்டனர். இதனால் காவல்துறையினர் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சல் செய்த 33 விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வாழ்க்கையே வெறுத்துப் போச்சு” தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

தாய்-மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் கீதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் தாமு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு சிவரஞ்சினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கணவர் இறந்த நிலையில் கீதா தனது மகளுடன் வாடகை வீட்டில் கும்மிடிப்பூண்டியில் தனியாக வசித்துள்ளார். இதனையடுத்து பல்வேறு பிரச்சினைகளால் மன உளைச்சலில் இருந்த கீதா தனது மகளுடன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இப்படியா ஏமாத்துவான்” வாலிபர் செய்த செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக போலி பணி நியமன ஆணையை தயார் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்தசாரதி என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் பார்த்தசாரதியிடம் அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட அரவிந்த் 5 லட்சம் ரூபாயை தனக்கு கொடுத்தால் உடனடியாக வேலை வாங்கி தருவதாக பார்த்தசாரதியிடம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபரின் விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் குடும்பத்தை பிரிந்து வாடகை வீட்டில் வசித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தாமோதரன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாமோதரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” கிடைத்த ரகசிய தகவல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர்  சட்டவிரோதமாக வெளிமாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்துவதாக காவல்துறையினற்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்ற ரயிலை நிறுத்திய காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் முருகன்  22 ரேஷன் மூட்டைகள் ரயிலில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“அதைப் பார்த்து இருக்க கூடாதா” முதியவருக்கு நேர்ந்த சோகம் திருவள்ளூரில் பரபரப்பு….!!

மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வங்கனூர் கிராமத்தில் மண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயியான மண்ணப்பன் மலம் கழிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது செடி கொடிகளின் மீது அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் அதனை மண்ணப்பன் தொட்டுள்ளார். இதனால் மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து மண்ணப்பன் தூக்கியெறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுப்பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மண்ணப்பனின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“அதுக்கு அனுமதி கொடுக்கல” போக்குவரத்துக்கு இடைஞ்சல்…. காவல்துறையினரின்அதிரடி நடவடிக்கை….!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க-வினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவள்ளுவர் மாவட்டத்தில் பாஜக கட்சியினர் பிரதமர் திரு.நரேந்திரர் மோடி அவர்களை அவதூறாக பேசிய பாதிரியாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவரான ராஜ்குமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக போராட்டம் நடத்திய பா.ஜ.க-வினர் 100 பேர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் உரிய அனுமதியின்றி போராட்டம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த கனமழை”…. ஆக்கிரமிக்கப்பட்ட வழிகள்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் ஏரிக்கு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சந்தைக் கோடியூர் ஏரிக்கு மழைநீர் செல்லும் வழியை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்ததால் ஏரிக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது என அப்பகுதி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் வேண்டும்” ஆய்வு செய்த அமைச்சர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!

ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சரிடம் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் ரயில் நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சரான சா.மு.நாசர் ஆய்வு செய்துள்ளார். அப்போது ரயில் நிலைய பொதுநல சங்கத்தின் செயலாளரான முருகையன் என்பவர் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தார். இதனையடுத்து திருநின்றவூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் எனவும், நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் எனவும் முருகையன் தெரிவித்துள்ளார். இது குறித்து பால்வளதுறை அமைச்சர் கூறும்போது தங்களின் கோரிக்கைகளின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை …. விவசாயிக்கு நடந்த சோகம் …. சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் மீஞ்சூர் அடுத்துள்ள வாயலூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை விவசாய பொருட்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் விரிப்பை வாங்க பொன்னேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது ,திருவெள்ளைவாயல் இலவம்பேடு  நெடுஞ்சாலையில் வேளூர் கிராமத்துக்கு அருகே வந்து கொண்டிருந்தார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்னு தெரியல …. தொழிலாளியின் விபரீத முடிவு …. காவல்துறையினர் தீவிர விசாரணை ….!!!

வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தில் ஒரு தனியார் பிளைவுட் தொழிற்சாலை உள்ளது . இந்த தொழிற்சாலையில் 26 வயதுடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுஜித் பேகரா என்ற வாலிபர் வேலை செய்து வந்துள்ளார். இவர் வேலை செய்யும் தொழிற்சாலைக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் உயிரிழந்த மூதாட்டி …. உறவினர்கள் திடீர் சாலை மறியல் …. திருவள்ளூர் பரபரப்பு ….!!!

விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின்  பிணத்துடன் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது . திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே பொன்பாடி காலனி பகுதியை சேர்ந்த இந்திராணி (வயது 65) என்பவர் வசித்து வருகிறார். இவர் 100 நாள் திட்டத்தில் வேலை செய்வதற்காக நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது திருப்பதியிலிருந்து வேகமாக வந்த டெம்போ வேன் ஒன்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

3 சிறுமிகள் உட்பட…. 5 பேர் குளத்தில் மூழ்கி பலி – சோகம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட 5 பேர் சம்பவத்தன்று அங்கு உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியவரை காப்பாற்ற முயன்ற போது ஒன்றன்பின் ஒன்றாக நீரில் மூழ்கியுள்ளனர். இதில் அதிதா(14), ஜீவிதா(14),  ஜோதி(10), சுமதி(38), சுகந்தி ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி…. விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி …!!!

திருவள்ளூரில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்       அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு  நிகழ்ச்சி  நடந்தது. உலக மக்கள் தொகை தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு  மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கியுள்ளார் . இதையடுத்து நிகழ்ச்சியில் விழிப்புணர்வு உறுதிமொழியை அவர் வாசிக்க இதனை பின்தொடர்ந்து ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதன்பிறகு உலக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கால் கழுவ சென்ற இடத்தில்…. மாணவனுக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கிணற்றில் தவறி விழுந்து 10 – ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற 10 – ஆம் வகுப்பு படித்துவரும் மகன் இருந்தான். இந்நிலையில் விக்னேஷ் கொட்டியாம்பூண்டி பகுதியில் வசிக்கும் அவரது சித்தப்பாவான சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து விக்னேஷ் வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். அதன்பின்னர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆத்திரமடைந்த மகன்…தாய்க்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் விசாரணை…!!

மது அருந்துவதற்கு பணம் அளிக்காததால்  மகன் தனது தாயை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் அம்பிகா என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மணியரசு என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் மணியரசு  தனது தாயிடம் மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதைப்போல் நேற்று மணியரசு தனது தாயிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டு  தகராறு செய்துள்ளார். இதனையடுத்து பணம் தருவதற்கு மறுத்த தனது தாயை கத்தியால் மணியரசு குத்தியுள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் அம்மா என்ன விட்டு போன…? வாலிபர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தாயார் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பருவதராஜபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தாயார் கடந்த 19-ஆம் தேதி அன்று உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து வெங்கடேசன் தாயார் இறந்ததை நினைத்து சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாயார் இறந்ததை தாங்கமுடியாத வெங்கடேசன் வீட்டில் யாரும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நீங்க இப்படி வரக்கூடாது… வாடிக்கையாளரின் மூர்க்கத்தனமான செயல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முகக்கவசம் அணியாததால் தட்டிக்கேட்ட கடை ஊழியர்களை வாடிக்கையாளர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருமழிசை பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடையில் தேவராஜ் வழக்கம்போல வேலை பார்த்து கொண்டிருந்த போது பிரசாந்த் என்பவர் செல்போன் வாங்குவதற்காக வந்துள்ளார். இதனை அடுத்து பிரசாந்த் அரசு நெறிப்படுத்திய விதிமுறைப்படி முகக்கவசம் அணியாமல் கடைக்குள் நுழைந்துள்ளார். இதனை பார்த்ததும் கடை ஊழியர்கள் முக […]

Categories
திருவள்ளூர்

உறங்க சென்ற பெயிண்டருக்கு ….நடந்த விபரீதம் ….சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

மாடிப்படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகேயுள்ள  திருமழிசை பிரயாம்பத்து பகுதியை சேர்ந்த மூர்த்தி பெயிண்டர் தொழிலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு உணவு   முடிந்ததும் வீட்டு மாடியில் உறங்கச் சென்று உள்ளார். இந்நிலையில் மாடிப்படிக்கட்டில் இருந்து இறங்கும் போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அவர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…. ஏக்கத்தில் இருந்த டிரைவர்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி …!!!

திருமணமகததால் ஏக்கத்தில் இருந்த  டிரைவர் மனமுடைந்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தடபெரும்பக்கம் ராஜா தெருவை சேர்ந்த முருகன் என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார் . இவர்  திருமணம் செய்துகொள்ளும் ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால்  தாயாரிடம் அடிக்கடி திருமணம் செய்து வைக்குமாறு கூறி தகராறு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இவர் சம்பவ தினத்தன்று மது அருந்திவிட்டு தாயிடம் வழக்கம்போல தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன் பின் மிகுந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாயமான மாணவி…. அத்துமீறிய வாலிபர் …. போக்சோவில் கைது செய்த காவல்துறை …!!!

 சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரதில் ஈடுபடுத்திய  வாலிபரை போஸ்கோ   சட்டத்தில் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஆவடியில் உள்ள  பள்ளியில் ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி இந்த சிறுமி திடீரென்று காணாமல் போயுள்ளார். இதனால் இவரது பெற்றோர்கள் பல இடங்களில் சிறுமியை தேடி பார்த்துள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்காததால் திருநின்றவூர் போலீசில் புகார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்காகவே கொரோனா தடுப்பூசி முகாம்…. அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ,’ மாற்றுத் திறனாளிகள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

டயர் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து…. தீயணைப்பு பணி தீவிரம்…..!!!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் நேற்று இரவு தொழிலாளர்கள் 50 பேர் பணியாற்றி வந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலையில் முன் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பழைய டயர்கள் இருந்த பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாலிபரை கத்தியால் வெட்டி…. தப்பி ஓடிய 4 பேர் ….போலீசார் வழக்குப்பதிவு…!!!

இருசக்கர வாகனம் மோதிய தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்துள்ள  வழுதிகைமேடு கிராமத்தை சேர்ந்த அருள் என்பவரின் மகள் சிவப்பிரகாசம். இவர் தன்னுடைய வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது சிவப்பிரகாசம் மீது மோதி உள்ளார். இது குறித்து சிவப்பிரகாசம் கேட்டதற்கு, சஞ்சய் அவரை மிரட்டி உள்ளார். சிறிது நேரம் கழித்து சஞ்சய் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலீசாரை கண்டதும் தப்பியோட்டம் …. மடக்கி பிடித்த போலீசார் …. 2 பேர் கைது …!!!

திருவள்ளூரில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன . திருவள்ளூர்  மாவட்டம் அதிகத்தூர் கொசஸ்தலை ஆற்றின் அருகே  மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று முன்தினம் கடம்பத்தூர் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 3 வாலிபர்கள் திருட்டுத்தனமாக மணலை கடத்தி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர் . அப்போது  போலீசாரை கண்டதும் அந்த 3 […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தவறி விழுந்த மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…! சோகத்தில் மூழ்கிய குடும்பம் …!!!

மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு  பஜனை கோவில் தெருவில் பாக்கியம் என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன் வீட்டு மாடிப்படியில்  இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்கும் போது, திடீரென கால் தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவருடைய  தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொரோனா ஒட்டிய சுவரொட்டி….”மாஸ்க்  போடாம, சும்மா வெளியே திரிஞ்சா… செத்துருவ”….!!!!

தமிழகம் முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஆனால் வெளியில் நடமாடும் மக்கள் சிலர் சரியாக முக கவசம் அணியாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். அதனால் நோய் பரவும் அபாயம் அதிகரிக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவிவரும் காரணத்தால் முக கவசம் அணிவது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படாது…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories

Tech |