திருவள்ளுவர் நாள் என்பது புகழ்பெற்ற தமிழ் கவிஞர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக வருடந்தோறும் ஜனவரி மாதம் 15-ஆம் தேதி திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை மெரினாவில் அவரது சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். திருவள்ளுவர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
