Categories
அரசியல்

அளவுக்கு அதிகமா பேச மாட்டேன்…. அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்ட…. உதயநிதி ஸ்டாலின் மனைவி…!!!

திருவல்லிக்கேணி தொகுதியில் திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான  பயிற்சியானது சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. இதனையடுத்து உதயநிதியின் தாயார் மற்றும் கிருத்திகா உதயநிதி இருவரும் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தொழில் சாதனங்களை வழங்கியபின்னர் கிருத்திகா உதயநிதி பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்பொழுது பத்திரிகையாளர்களில் ஒருவர் கிருத்திகா உதயநிதியிடம், “திருநங்கைகளுக்கும் 50% அரசியல் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பினர். இதற்கு பதிலளித்த கிருத்திகா உதயநிதி, “அரசியலில் நான் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி கோயிலில் குவிந்த பக்தர்கள்..!!

புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை ஒட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவது பல்வேறு பலன்களை தரும் என்பது ஐதீகம். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையான  நேற்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் கூடினர். முக கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க பட்டனர். பக்தர்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் செயின் திருட்டு: சிறுவனுக்கு பயிற்சியளித்த கொள்ளையர்கள்..!!

சென்னை திருவல்லிக்கேணியில் செயின் பறிக்க சிறுவனுக்கு பயிற்சி  அளித்தவர்களை போலீசார் கைது செய்தனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த லட்சுமி நேற்று பார்த்தசாரதி சுவாமி தெருவில் நடந்து வந்தபோது அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க நகையை சிறுவன் ஒருவன் பறித்துச் சென்றான். இதுதொடர்பாக லட்சுமி அளித்த புகாரின் பேரில் ஐசுஸ் பகுதி போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் விஜய், சக்திவேல் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அந்த மாணவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் 3 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே தெருவை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா உறுதி: திருவல்லிக்கேணியில் பரபரப்பு..!

சென்னை திருவல்லிக்கேணியில் இன்று 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே தெருவை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து அந்த பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் […]

Categories

Tech |