Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீசாரின் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்காக…. புதிய செல்போன் செயலி அறிமுகம்…!!!!!

குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கு போலீசார் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து செல்லும் போலீசார் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்காக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். தமிழக காவல்துறையில் புதியதாக இ-பீட் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. இந்த புதிய முறை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் 7 போலீஸ் உட்கோட்டங்களில் தலா ஒரு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த செயலியை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சேர்ந்து வாழத்தான் முடியல…. உடலையாவது கொடுங்க…. மாலத்தீவில் இறந்த பெண்ணின் கணவர் உருக்கம்….!!!!!

எனது மனைவியின் உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மாலத்தீவில் இறந்த பெண்ணின் கணவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாலத்தீவில் தீ விபத்து ஏற்பட்டதில் 13 பேர் இறந்து போனார்கள். இதில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு தாலுக்கா மலையனூர் மல்காபூர் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழியும் ஒருவராவார். இவரின் கணவர் பாலகிருஷ்ணன். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே இருக்கும் பையர் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சென்ற 20 வருடங்களுக்கு முன்பாக தேன்மொழியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு […]

Categories
திருவண்ணாமலை தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே…! ஆதாருடன் வங்கிக் கணக்கு, செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்…. 30-ம் தேதியே கடைசி…!!!

ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தில் தொடர்ந்து நிதி பெறுவதற்கு ஆதார உடன் வங்கி கணக்கு, செல்போன் எண்ணை வருகின்ற 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சென்ற 2018 ஆம் வருடம் முதல் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக ரூபாய் 2000 வீதம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

4 கிரவுண்ட் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில்…. சிக்கிக்கொண்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்…. போலீஸ் அதிரடி….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேங்கிகால் பகுதியில் வசித்து வரும் சுபாஷினி என்பவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அழுத்துள்ளார். இந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது பல்லாவரம் பகுதியில் எங்களுக்கு சொந்தமான 4 கிரவுண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்பு விலைக்கு வாங்கி அதில் சுற்றுச்சுவர் கட்டி பராமரித்து வருகின்றோம். இந்த நிலையில் கீழக்கட்டளையில் உள்ள ஏழுமலை என்பவர் நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தில் சுற்றுச்சுவரை இடித்து வேறொரு இரும்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென பெய்த சாரல் மழை…. அவதிக்குள்ளான பொதுமக்கள்….!!

திருவண்ணாமலையில் பெய்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று தொடர்ந்து பலத்த மழை பெய்தது. காலையிலேயே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பின் சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. காலை 10 மணியிலிருந்து தொடர்ந்து திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆகியோர் சிரமப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை”… மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலை மறியல்….!!!!!!

ஆதி திராவிட நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பெற்றோர்கள் மாணவர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் அருகே இருக்கும் காயம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் அப்பகுதியை சுற்றி இருக்கும் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லை எனவும் குடிநீர், கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர இல்லை. மேலும் போதுமான ஆசிரியர்களும் இல்லை என […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“10 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கும் நல்ல பாம்பு”…. வழிபாடு செய்யும் கிராம மக்கள்…. பரபரப்பு..‌!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரண்மல்லூர் ஒன்றியம் வல்லம் கிராமத்தில் ஏரிக்கரை ஓரத்தில் சில தொழிலாளர்கள் மரம் வெட்ட சென்ற போது அங்கு வேப்பமரத்துக்கடியில் ஆறடி நீளம் இருக்கும் நல்ல பாம்பை பார்த்துள்ளார்கள். இதனால் விரைந்து வந்து கிராம மக்களிடம் கூறியுள்ளார்கள். இதன்பின் அனைவரும் நல்ல பாம்பு இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தார்கள். அந்த நல்ல பாம்பு தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக அங்கேயே இருக்கின்றது. இதனால் வல்லம் கிராமத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் பாம்புக்கு […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா… 40 லட்சம் பக்தர்கள் வர வாய்ப்பு… மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வருகிற 24-ம் தேதி தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் பற்றி அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் கலந்துகொண்டு பேசியுள்ளார் அப்போது அவர் கூறியதாவது, கார்த்திகை தீப திருவிழாவில் இந்த வருடம் அதிகபட்சமாக 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

Instagramல் காதல்…. புது மாப்பிள்ளையின் மர்ம சாவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணுக்கும் instagramல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த மாதம் ஐந்தாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருமணம் செய்த நாளிலிருந்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் புதுமணப்பெண் 23ஆம் தேதி ஊருக்கு செல்வதாக கூறு விட்டு சென்றுள்ளார். அதன் பின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வருமானம் இருந்தும் அடிப்படை வசதிகள் இல்லை”…. ஆரணி பயணிகளின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா…???

ஆரணி பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளின்கூடிய புதிய பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களின் மூலம் நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தும் பயணிகளுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். பயணிகள் அமர்வதற்கு போதிய இட வசதி இல்லை. குடிநீர் குழாய்கள் அமைத்தும் தண்ணீர் வருவதில்லை. மேலும் இலவச கழிப்பறை வசதி கூட இல்லை. […]

Categories
திருவண்ணாமலை

மாநில இளையோர் தடகள போட்டி…. வட்டறிதல் போட்டியில்….. கலக்கிய காஞ்சிபுரம் மாணவர்….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட தடகள சங்கம் ஆகியோர் இணைந்து 36 வது மாநில இளையோர் தடகளப் போட்டியை நடத்தி வருகின்றனர். இந்த போட்டி கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்ந போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதில் 20 வயது உட்பட்டோர் பிரிவில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக கல்லூரியில் பயின்று வரும் மாணவர் மகேஸ்வர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெண் கேட்டு சென்றபோது…. காதலனை தாக்கிய மாணவியின் தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கஸ்தம்பாடி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாம்ராஜ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சாம்ராஜும் பதினொன்றாம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் சாம்ராஜை கண்டித்தனர். இதனை அடுத்து பெற்றோர் சொல்லும் உறவினர் மகனையே திருமணம் செய்து கொள்வதாக மாணவி தனது காதலனிடம் தெரிவித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாததால் தகராறு…. காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பொத்தரை கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு சங்கர் தரணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் சங்கர், அவரது தாய், தந்தை ஆகியோர் தரணியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் வரதட்சணை வாங்கி வருமாறு அவர்கள் தரணியை துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இவர்களுக்கு இங்கே இடமில்லை”…. ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள்…. பேச்சுவார்த்தையில் அதிகாரிகள்….!!!!

வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அப்பேடு, நாச்சாவரம், தத்தனூர், கொங்காவரம், ஈச்சத்தாங்கல் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் 75 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் கொங்கவரம் கிராமத்தில் மட்டும் 50 பேருக்கு வீடு கட்டுவதற்கு இரண்டு சென்ட் வீதம் வீட்டு மனை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அளவீடு செய்யும் பணி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்,மற்றும் நில அளவையர் சென்று 50 பேருக்கும் தலா இரண்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சண்டையை தடுக்கச் சென்ற நாடக ஆசிரியர் அடித்துக் கொலை”…. டீக்கடைக்காரர் கைது….!!!!!

தம்பதியை தாக்கிய டீக்கடைக்காரரை தடுத்த நாடக ஆசிரியர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் டீக்கடைக்காரரை கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் அருகே இருக்கும் பங்களாமேடு பகுதியில் முபினுதீன் என்பவர் டீக்கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சென்ற 6-ம் தேதி வேலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பங்களா மேடு டீக்கடையில் டீ சாப்பிட்டார்கள். அவர்களிடம் டீக்கடைக்கார் தகராறில் ஈடுபட்டு தம்பதியினரை அடித்ததாக சொல்லப்படுகின்றது. இதை பக்கத்தில் குடியிருக்கும் நாடக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“எனக்கு நீதி வேண்டும்”…. தாசில்தார் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி…. ஆரணியில் பரபரப்பு….!!!!!!

ஆரணி தாலுக்கா அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு தாலுகாவிற்குட்பட்ட தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மீரா. இத்தம்பதியினருக்கு மௌலீஸ்வரி என்ற மகள் இருக்கின்றார். ரமேஷும் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் ரமேஷ் மீராவை தினமும் தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகின்றது. இதனால் மனமுடைந்த மீரா கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அவரிடம் இருந்து எங்களை மீட்க வேண்டும் எனக் கூறி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கை”….. ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்….!!!!!!

போதை பொருள் பயன்பாட்டற்ற மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் போதை பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை தாங்கி ஆலோசிக்கப்பட்டதாவது, மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க காவல்துறையின் மூலம் மாவட்ட எல்லைகளில் போதைப்பொருள் கடத்துவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. “கிரிவலம் செல்ல உகந்த நேரம்”…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!!!!!

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் இங்கிருக்கும் மலையைச் சுற்றி கிரிவலம் வருவார்கள். அந்நேரத்தில் திருவண்ணாமலை நகரமே விழாக்காலம் போல் மக்கள் கூட்டம் இருக்கும். இந்த நிலையில் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி நாளை அதிகாலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை”….. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 ஆம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“திருவண்ணாமலையில் உரம் கட்டுப்பாடு”…. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை….!!!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு என வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான 1459 டன் யூரியா, 418 யூரியா, 215 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் மணலி மற்றும் காட்பாடி முண்டியம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் சரவணன் மற்றும் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்கள். அப்போது பேசிய வேளாண்மை இணை இயக்குனர், நடப்பு பருவத்துக்கு தேவையான உரங்கள் தனியார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவர் சேர்க்கையில் முறைகேடு”…… சாலை மறியலால் பரபரப்பு….!!!!!

மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக கூறி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சென்ற 17ஆம் தேதி இளநிலை பட்டப்படிப்புக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மதியம் வரை காத்திருந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்படாததால் ஆத்திரம் அடைந்து கல்லூரியை முற்றுகையிட்டார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட VAO”…. சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி….!!!!!

வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி விஜயா சென்ற 2010 வருடம் இறந்துவிட்டார். இதை தொடர்ந்து அவரின் பெயரில் தேசிய வங்கி ஒன்றில் 27 ஆயிரத்துக்கு நகை கடன் வாங்கி இருந்ததால் அதனை மீட்க வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டது. இதனால் இளங்கோவன் தனது குடும்ப அட்டை மற்றும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மைநிலை மையத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்”…… செப் 8-ம் தேதியே கடைசி நாள்…!!!!!!

பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சத்துவாச்சாரியில் உள்ள பழுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் பள்ளிகளில் ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புகள், கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் முதலாம் ஆண்டு, பன்னாட்டு தேசிய சீனியர் பிரிவு பதக்கம் வென்ற கல்லூரி படிப்பை முடித்த மாணவ-மாணவிகள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கபட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“படியில் பயணம், நொடியில் மரணம்”…. ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்யும் மாணவர்கள்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!!!!!

பேருந்துகளில் தொங்கியபடி சாகச பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியாக பெங்களூர் செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டிலும் பக்கவாட்டிலும் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ அண்மையில் இணையத்தில் பரவியது. இதுபோல நேற்று முன்தினமும் செங்கம் சாலையில் சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இது குறித்து மாணவர்களிடம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தொழில் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்”…. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!!

விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் https://dahd.nic.in/ahid அல்லது https://ahidf.udyamimitra.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் தகுதியின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சான்றிதழ் வழங்க 2 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரி”…. கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்…!!!!!!

லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புதுவாணியங்குளம் தெருவை சேர்ந்த லியாகத் அலி என்பவர் காஞ்சிச்சாலையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நிலநீர் எடுப்பு சான்று வழங்க கோரி சென்னையில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு சென்ற 15-ம் தேதி விண்ணப்பித்துள்ளார். இது பற்றி திருவண்ணாமலை உதவி நிலவியல் நிலைநீர் பிரிவு அதிகாரி சிந்தனைவளவன் என்பவரை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். அதன் பேரில் சில நாட்களுக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஐஸ் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி…. கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம்… திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம் …!!

திருவண்ணாமலையில்பிரபல ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் ஐஸ் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடிய சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதம் – சரிதா தம்பதியின் இரண்டாவது குழந்தை சபியாவுக்கு  நேற்று மூன்றாவது பிறந்த நாள் என்பதால்,  பிறந்த நாளை கொண்டாடுவதற்காக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே செயல்படும் பிரபல ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் ஐஸ் கேக் வாங்கி உள்ளனர். வாங்கிய அரை மணி நேரத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான இணையதள மென்பொருள் விற்பனை”…. பல லட்சம் லாபம்… பீகார் மாநில இளைஞர் கைது….!!!!!

சட்ட விரோதமாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பீஹார் மாநில இளைஞரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் தனியார் ரயில் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் கடைகளில் ஐஆர்சிடிசி சாப்ட்வேருக்குள் நுழைந்து சட்ட விரோதமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட் விலையை 200 முதல் 500 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ரயில் பாதுகாப்பு படை சீனியர் டிவிஷனல் செக்யூரிட்டி கமிஷனருக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்…. “என்னுடைய கணவர் வேற திருமணம் செய்யப் போறாரு”….. போராட்டத்தில் ஈடுபட்ட கர்ப்பிணி…. பரபரப்பு….!!!!!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்து வயது மகளுடன் வந்த 7 மாத கர்ப்பிணி  தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மெய்யூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி அபிராமி. இவர் தனது 5 வயது மகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் ஏழு மாத கர்ப்பிணி ஆக இருக்கின்றார். இந்நிலையில் குழந்தையுடன் அபிராமி ஆட்சியர் அலுவலகத்தின் போர்ட்டிகோ பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டுத் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும்”….. ஆட்சியர் தகவல்….!!!!!

வேளாண்மை சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 2020-21 முதல் 2025-26 வரை செயல்படுத்த இருக்கின்றது. இத்திட்டத்தில் உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண்மை சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க விருப்பம் இருக்கும் தனிநபர், மகளிர் சுய உதவி குழுக்கள், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வெவ்வேறு இடங்களில் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு”…. போலீசார் விசாரணை…!!!!!!

திருவண்ணாமலையில் வெவ்வேறு இடங்களில் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிளியாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன். அவலூர்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவர்கள் இருவர் மீதும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றது. இவர்கள் இருவரும் கூட்டாளிகள் என சொல்லப்படுகின்றது. இந்நிலையில் பச்சையப்பன் நேற்று இரவு எட்டு மணி அளவில் அவலூர்பேட்டை சாலை ஜங்ஷன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து அறிவாளால் வெட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள்”…. நெடுங்குளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி….!!!!!

நெடுங்குளம் கிராமத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் வட்டார வள மையம் சார்பாக நெடுங்குளம் கிராமத்தில் இருக்கும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இந்நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம் உள்ளிட்டோர் தலைமை தாங்க வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க ஆசிரிய பயிற்றுநர் இசைக்கருவி வரவேற்றார். இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மாற்றுத்திறனாளி குழந்தைகள் 30 பேருக்கு உபகரணங்களை வழங்கினார். இந்த குழந்தைகளின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தமிழக கோயிலில் காசு மட்டுமே பிரதானம்…. “2 மணி நேரம் காத்திருந்த பக்தர் ட்விட்”…. விரைந்து செயல்பட்ட இந்து அறநிலையத்துறை…!!!!!

தமிழக கோவில்களில் காசு மட்டுமே பிரதானம் என பக்தர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சலசலப்பு ஏற்பட்டது. நேற்று புரட்டாசி மாத பிறப்பு என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். பொது தரிசனம் மட்டுமல்லாமல் 50 ரூபாய்க்காண கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்களின் கூட்டம் அழைமோதியது. இந்த நிலையில் நேற்று முக்கிய பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வந்தவாசியில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா”…. 500 இளைஞர்கள் தேர்வு….!!!!!

வந்தவாசியில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில அரசு வாழ்வாதார இயக்கம் சார்பாக இளைஞர் திறன் பயிற்சி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி பெற 500 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவ்விழாவிற்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குனர் சையத் கலைமான் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆரணி அருகே குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த சிறுவர், சிறுமிகள்….. “வாந்தி, மயக்கம்”…. மருத்துவமனையில் சிகிச்சை….!!!!!!

ஆரணி அருகே குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அருகே இருக்கும் பூசிமலைகுப்பம் கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த குடிநீரை குடித்த பூபதின், ரித்தீஷ், கோபிகா, ஆர்.தர்ஷன், தர்ஷன், சுஷ்மிதா, காயத்ரி, பூவரசன் உள்ளிட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இது போலவே காமக்கூர்பாளையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட வெற்றிச்செல்வன், கோபாலகிருஷ்ணன், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முதல் தலைமுறை தொழில் முனைவோர்…. “மானிய தொகை 75 லட்சமாக உயர்வு”…. ஆட்சியர் தகவல்…!!!!!!

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மானியத்தொகை 75 லட்சம் ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, படித்த தொழில் தொடங்க விருப்பம் இருக்கும் முதல் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தில் தமிழக அரசு 5 கோடி வரையிலான திட்ட முதலீட்டிற்கு 25 சதவீதம் அதிகபட்ச மானியமாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“அமைச்சரிடம் மனு கொடுத்த தூய்மை பணியாளர்கள்”…. நடவடிக்கை எடுப்பதாக உறுதி….!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சரிடம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தற்காலிகத் தூய்மை பணியாளர்கள் மனு ஒன்றை கொடுத்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவரிடம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை நகரப் பகுதியில் நாங்கள் அனைவரும் வசிக்கின்றோம். சென்ற 13 வருடங்களாக அருணாசலேஸ்வரர் கோவிலில் தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக கோவில் தூய்மை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குட்கா பொருட்கள் விற்பனை…. “போலீசாரின் சோதனை வேட்டை”…. 4 கடைகளுக்கு சீல்…!!!!

குட்கா பொருட்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு போலீஸார் சீல் வைத்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் போலீஸ்சார் ஈடுபட்டு வருகின்றார்கள். அதன்படி திருவண்ணாமலை செங்கம் சாலையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்ட பொழுது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். இதில் நான்கு பேரின் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டு அவர்களிடம் இருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை”…. தொடக்க விழா…!!!!!

கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடக்க விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசபாக்கம் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் தங்களின் நிலத்தில் கலப்படம், ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவை இல்லாமல் விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள், சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை செய்வதற்கான வார சந்தை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகில் இருக்கும் மைதானத்தில் தொடங்கப்பட்டது. இந்த வார சந்தையானது ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் […]

Categories
ஆன்மிகம் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பௌர்ணமியை முன்னிட்டு…. அலைமோதிய கூட்டம்…. தி.மலையில் பரபரப்பு….!!!!

பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று திருவண்ணாமலை அருணாச்சல அருணாச்சலேஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள கிரிவல பாதையில் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த நிலையில் கடந்த 9 தேதி மாலை 6.30 மணியளவில் தொடங்கிய பௌர்ணமி நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு முடிவடைந்தது. இந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“விவசாயிகள், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்கவில்லையா….?” இதோ உங்களுக்கான தகவல்…!!!!!

ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை விவசாயிகள் இணைப்பதற்கு அஞ்சலகங்களை அணுகலாம் என திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார். நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 வழங்கி வருகின்றது. இந்த நிதியானது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெரும் விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலி ஆவணங்கள்…. “அதிகாரி போல் கையெழுத்திட்டு வீட்டுமனை விற்பனை”…. பலே கில்லாடிகளுக்கு வலைவீச்சு…!!!!!

போலி ஆவணங்களை தயாரித்து அதிகாரிப்போல் கையெழுத்திட்டு வீட்டுமனைகள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி பகுதியை சேர்ந்தவர்கள் அரசு மற்றும் தணிகைவேல். ஆரணியிலிருந்து ஆற்காடு செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் வெள்ளேரி பகுதியில் சென்ற 2019 வருடம் ஆர்.பி.ஜி கார்டன் தொடங்கப்பட்டு அங்கு வீட்டுமனைகள் விற்பனை நடைபெற்றது. இங்கு உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் இல்லாததால் தனி அலுவலர்களாக இருந்த ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் கையொப்பமிட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“முதலமைச்சரின் காலை உணவு திட்டம்”…. திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வு….!!!!!!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தினை முதல் முதலாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் செயல்படுத்துவது பற்றி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஜமுனா மரத்தூரில் இருக்கும் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வதியன்கொட்டாய் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் கோவிலூர் ஊராட்சி பெருங்காட்டூர் மற்றும் குண்டாளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் பாக்குமுடையனுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் கோவிலானுர் ஊராட்சி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு”…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு….!!!!!

செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் பகுதியில் சென்ற ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் செங்கம் குப்பநத்தம், கலசபாக்கம் மிருகண்டா அணை என இரண்டு அணைகளும் நிரம்பியதை தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டதால் அணைகளில் இருந்து செய்யாற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இதன் காரணமாக கரையோரம் இருக்கும் மக்கள் யாரும் ஆற்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திக் திக் நிமிடங்கள்…..! வேலுரிலிருந்து சென்னைக்கு….. உயிர் கொடுக்க பறந்த இதயம், கண்கள்….!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அகாரம் கிராமத்தில் கலைச்செல்வி(46) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் முருகன் ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 2 பெண் பிள்ளைகளுடன் கலை செல்வி கூலி வேலை பார்த்து படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி கடந்த 1 ஆம் தேதி மாலை சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்பக்கம் வந்த இருசக்கர வாகனம் கலைச்செல்வி மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அதன் பிறகு அவரை மீட்டு பொதுமக்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சமுதாய நல கூடத்தில் தூங்கிய மூதாட்டி…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

மர்ம நபர்கள் மூதாட்டியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புலிவானந்தல் கிராமத்தில் சின்னதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காசியம்மாள்(85) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்தம்பி இறந்து விட்டதால் மூன்றாவது மகனின் பராமரிப்பில் காசியம்மாள் இருந்துள்ளார். இந்நிலையில் காசியம்மாள் தினமும் மகன் வீட்டில் சாப்பிட்டு விட்டு அருகில் இருக்கும் சமுதாய கூடத்தில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கொடுமையே…..! “14 வயது சிறுமியை தாயாக்கிய வாலிபர்”…. பாய்ந்தது போக்சோ…!!!!!

9-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்ததையடுத்து திருமண ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாகிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரின் எதிர் வீட்டில் 17 வயதான இளைஞர் பெயிண்ட் அடிக்கும் தொழிலை செய்து வருகின்றார். இந்நிலையில் இளைஞர் பள்ளி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகின்றது. இதில் மாணவி கர்ப்பமாகி உள்ளார். ஆனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்து வெளியேறிய தொழிலாளி…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி  தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்சாத்தமங்கலம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாய தொழிலாளியான  பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  பிரபாகரன்  கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் 2  நாட்களாக  பிரபாகரன் வீடு திரும்பவில்லை. இதனை  பார்த்து  அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பிரபாகரனை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் பிரபாகரன் வேலை செய்ய வந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“100 வருடத்துக்கு பிறகு நடைபெற உள்ள புதிய தேர் வெள்ளோட்டம்”…. அதிகாரிகளுக்கு பக்கதர்கள் வலியுறுத்தல்….!!!!!!

100 வருடங்களுக்கு பிறகு நடைபெற இருக்கும் புதிய தேர் வெள்ளோட்டத்திற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி டவுன் கொசபாளையம் பகுதியில் இருக்கும் அலர்மேலு மங்கை சமதே கில்லா சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா மற்றும் ரத சப்தமி சமயத்தில் சாமி திருவீதி உலா நடத்தப்படும். சுமார் 100 வருடங்களுக்கு முன்பாக மரத்தேர் உலா வந்த பொழுது தீ விபத்தில் சேதம் அடைந்தது. இதனால் பக்தர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த 6 அடி பாம்பு…. அலறி அடித்து கொண்டு ஓடிய குடும்பம்….. லாபகரமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்….!!!!

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் ஞானசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று திடீரென அருகில் இருக்கும் காட்டுப்பகுதியில் இருந்து 6அடி  நீளம் உடைய சாரை பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  அவரது குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இதனை  பார்த்த  அப்பகுதி  மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories

Tech |