Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை தீபத்திருவிழா… பக்தர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!!

திருவண்ணாமலை தீப திருவிழாவில் பங்கேற்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழா மற்றும் தீபத் திருவிழாவை நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சக்திவேல் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழா நடத்துவது பற்றி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி எடுக்கப்படும் முடிவுகளை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தெரிவிக்க […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சூரிய சக்தி மூலம் இஸ்திரி பெட்டி… முதலமைச்சர் பாராட்டு…!!!

சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டறிந்து விருது பெற்ற மாணவிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற மாணவி இளம் வயதிலிருந்தே அறிவியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது சூரிய சக்தி மூலமாக இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் என்ற விருது பெற்றுள்ளார். அந்த சிறுமிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன்… மருத்துவரின் அசத்தல் திறமை… குவியும் பாராட்டு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 வயது சிறுவன் விளங்கிய ஒரு ரூபாய் நாணயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா ஹரிதாரி மங்கலம் கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ஐந்து வயதில் வேலு என்ற மகன் இருக்கிறான். அவன் நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி இருக்கிறான். அதனைக் கண்ட வேலுவின் பெற்றோர் சிறுவனை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு அனுமதியில்லை…. மாவட்ட நிர்வாகம் திடீர் அறிவிப்பு…!!

அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருவிழா அன்று கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கோவில்களுக்குள் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே கோயில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பக்தர்கள் 5000 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா நவம்பர் 20 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இதை செய்தால் முகத்தில் கருவளையம் நீங்கும்… பாம்பு வைத்தியம்… ஓட்டம் பிடித்த இளைஞர்கள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருவளையத்தை நீக்குவதாக கூறி நல்ல பாம்பை முகத்தில் தேய்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ் புதூரில் குமரேசன் என்ற பாம்பாட்டி வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்தியுள்ளார். அவர் தங்களின் முகத்தில் இருக்கும் கருவளையத்தை நீக்க வேண்டுமா? என்னிடம் உள்ள விஷ பாம்பை வைத்து முகத்தில் தேய்த்தால் போதும், அவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும், என்ற ஆசை வார்த்தைகளை […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

குளிக்கச்சென்ற அக்கா-தங்கை…. நேர்ந்த சோகம்…. கதறி அழுத பெற்றோர்

போளூர் அருகே குட்டையில் மூழ்கி அக்காள்- தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரை அடுத்த பெரியகரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீ பக்சிங் இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இங்கு கூர்காவாக  பணிபுரிகின்றார். இவருக்கு 7 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளன. இவர்களில் சாந்தி பெரியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பும் , பகவதி காந்தி நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அனுமதியின்றி மணல் அள்ளிய போது விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மணல்கடத்தலின் போது மண் சரிந்து இளைஞர் ஒருவர் உயிர் இறந்தார். ஆரணி அருகே அத்திமலைப்பட்டி ஏரியில் அம்மாபாளையம்  சேர்ந்த சுதாகர் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் அனுமதியின்றி  நள்ளிரவில் மணல் அள்ளி உள்ளனர்.  அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேம் என்ற இளைஞர் மணல் அள்ளி ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென மண் சரிந்து டிராக்டரில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய பிரேம் சம்பவ  இடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்தார். தகவல் அறிந்து […]

Categories
ஆன்மிகம் திருவண்ணாமலை வழிபாட்டு முறை விழாக்கள்

அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா கொண்டாட்டம்…!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் எட்டாம் நாளில் பராசக்தி அம்மன் லிங்க பூஜை  அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழாவின் எட்டாம் நாளான நேற்று மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அம்பாள் உற்சவ மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லிங்க பூஜை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வேத மந்திரங்கள் முழங்க 16 வகை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தி.மலையில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் உணவிற்காக தள்ளுமுள்ளு…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் உணவிற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை படம்பிடித்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை தாக்கி அதிமுகவினர் கேமராக்களைப் பரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை வடக்கு  மாவட்டம் ஆஇஅதிமுக ஆலோசனை கூட்டம் செய்யூர்  கிராமத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். குறிப்பாக 500 பேர் அமரக்கூடிய திருமண மண்டபத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து விழாக்கள்

அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி கோலாகலம்…!!

நவராத்திரி திருவிழாவின் ஐந்தாம் நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அம்மன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒன்பது நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் காட்சியளிப்பார். அதன்படி ஐந்தாம் நாளான நேற்று அலங்கார மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பின்பு ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மனாக காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குயிலம் ஊராட்சியில் 2017-18 ஆம் ஆண்டு பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் குயிலம் ஊராட்சி செயலாளரும், திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமாண திரு காசி என்பவர் இறந்தவர்களின் பெயர்களில் வங்கி கணக்கு தொடங்கி வீடு கட்டி முடித்து விட்டதாக கூறி நான்கு முறை வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்து உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுபோல் இறந்தவர்களின் பெயரில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 2 மாதம் தான்… புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை… என்ன காரணம்?… போலீஸ் விசாரணை…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்துள்ள கலிங்கலேரி என்ற கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். அவரின் 20 20 வயதுடைய மகள் சரண்யாவுக்கும் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா ஈயகுணம் கிராமத்திலுள்ள பெரியசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி சரண்யா தனது கணவருடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று […]

Categories
கோயம்புத்தூர் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கல்யாண ஆசையில் இருக்கும் பெண்கள்…. ஸ்கெட்ச் போட்ட இளைஞன்…. வெளியாகிய அதிர்ச்சி சம்பவங்கள்….!!

திருமணம் செய்வதாக ஆசை கூறி நகை மோசடி செய்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் மஞ்சூரில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜ். திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் இவர் தனக்கு மணமகள் வேண்டும் என்று இணையதளம் மூலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். இதனைப் பார்த்த விதவைப் பெண்கள், திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என பலரும் கார்த்திக்கின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …!!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எலித் தொல்லை தாங்கல… தடுத்து நிறுத்துங்க… எலிகளுடன் போராட்டத்தில்… இறங்கிய விவசாயிகள்…!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் னர் விவசாயிகள் அனைவரும் தங்கள் கையில் எலிகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் விளைநிலங்களில் மணிலா பயிரிட்டுள்ளனர். அந்த வயல்களில் எலித்தொல்லை மிக அதிகமாக இருப்பதால், மகசூல் பாதிக்கப்படும் அபாயம் உண்டாகியுள்ளது. இந்நிலையில் பல சங்கங்களை சார்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிப்படை தேவைகளுக்காக ஏங்கி தவிக்கும் இருளர் இன மக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அடிப்படை வசதிகளுக்காக ஏங்கித் தவிக்கும் இருளர் இன மக்களின் அவல வாழ்க்கையை விவரிக்கும் ஒரு செய்தித் தொகுப்பு. திருவண்ணாமலை மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பூதக்குலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாத இந்த மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் போக்குவரத்திற்காக தாங்களாகவே மண் பாதையை உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் வேண்டும் என்றால் அருகிலுள்ள கிராமங்களில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“செல்போன் வாங்கித் தாங்க” காத்திருக்க சொன்ன பெற்றோர்…. மகள் எடுத்த விபரீத முடிவு….!!

செல்போன் வாங்கி தராததால் 9 வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் வாணாபுரம் அருகே உள்ள தேவனூர் பகுதியை சேர்த்தவர் சௌந்தர்ராஜன்-சத்யவாணி தம்பதியினர். இவர்களுக்கு  நாதஸ் ஸ்ரீ (14),  பிரீத்தி(13), பத்மஸ்ரீ (11 )என மூன்று மகள்களும், யோகேஸ்வரன்(9) என்ற மகனும் இருக்கின்றனர். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நாதஸ்ஸ்ரீ ஒன்பதாம் வகுப்பும், ப்ரீத்தி பத்மஸ்ரீ ,யோகேஸ்வரன் ஆகியோரும் படித்து வருகின்றனர். நாதஸ்ஸ்ரீ பெற்றோரிடம் செல்போன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கிக் கொடுங்க… கொஞ்சம் பொறுமையாய் இரு… விரக்தியில் மாணவி எடுத்த… விபரீத முடிவு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் விரக்தி அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாணாபுரம் அருகே இருக்கின்ற தேவனூர் என்ற பகுதியில் சவுந்தர் ராஜன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு சத்தியவாணி என்ற மனைவியும், 14 வயதுடைய நாதஸ்ஸ்ரீ, 13 வயதுடைய ப்ரீத்தி, 11 வயது உடைய பத்மஸ்ரீ ஆகிய மூன்று மகள்களும், 9 வயதுடைய யோகேஸ்வரன் என்ற மகனும் இருக்கின்றனர். மூத்த மகளான […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கி தராத தந்தை…. கடத்தல் நாடகமாடிய மகன்… போலீஸ் செய்த செயல்…!!

தந்தை செல்போன் வாங்கித் தராததால் தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய சிறுவனை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வெட்டவளம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் என்பவரது மகன் பரத். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இவர் தனது தந்தை ரத்தினவேலிடம் தனக்கு புதிதாக செல்போன் வாங்கித் தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ரத்தினவேல் கூலித்தொழில் செய்து வருவதால் தனது சூழலை மகனிடம் எடுத்துக் கூறியுள்ளார். ஆனாலும் அதனைப் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வாழ்க்கையை சீரழித்த ஹலோ ஆப் – கள்ளக்காதலால் குழந்தை கொலை..!!

நாகை அருகே 3 வயது குழந்தை கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குழந்தையின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹலோ ஆப்- இல் பழகிய அவனுக்காக பெற்ற குழந்தையையே பலிகொடுத்த கொடூர தாய் குறித்து விவரிக்கின்றது. திருவண்ணாமலை  மாவட்டம் செங்கம் அரசமரத் தெருவைச் சேர்ந்தவன் ராமதாஸ், கதிர் அறுக்கும் இயந்திரம் ஓட்டுநரான ராமதாஸ் ஏற்கனவே திருமணமானவன். இந்த நிலையில் கடந்த 11 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசி அவரது மகள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முதல்வரை வரவேற்ற பேனர் வைப்பதில் கோஷ்டி மோதல் – மக்கள் அதிருப்தி..!!

திருவண்ணாமலையில் நீதிமன்றம் உத்தரவுகளைமீறி அதிமுகவினர் பேனர் வைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் திரு பழனிசாமி வரும் 9-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்பதில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் நிலவுகிறது. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் புகைப்படம் மற்றும் பெயர் இடம்பெறாதது அதிமுக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவுகளை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இரண்டு காதல் ஜோடிகள்… உயிருக்கு ஆபத்து எங்களுக்கு பாதுகாப்பு குடுங்க…எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்…!!

எஸ்பி அலுவலகத்தில் ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடிகள் உயிருக்கு ஆபத்து என்று தஞ்சம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பவுன்குமார்- விஜி என்ற திருமணமான காதல் ஜோடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி தஞ்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக விஜி கூறுகையில் “நாங்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். சமீபத்தில் வேறொரு பையனுடன் எனக்கு திருமணம் செய்து வைக்க என் பெற்றோர் தீர்மானித்ததால் இருவரும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஜவ்வாது மலைக்கு இடம்பெயரும் பட்டாம்பூச்சிகள்…!!

 மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை காரணமாக கண்ணை கவரும் பட்டாம்பூச்சிகள் ஜவ்வாது மலைக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. பட்டாம்பூச்சிகள் பொதுவாக அடர் காடுகளில் மலைப் பிரதேசங்களில் வாழும் தன்மை கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சில வகை பட்டாம்பூச்சிகள் அங்கு பெய்து வரும் மழை பொழிவால் தற்போது கிழக்கு தொடர்ச்சி  மலைகளில்  அங்கமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை போன்ற மலை பிரதேசங்களில் தற்போது படையெடுத்து வருகின்றன. ஜவ்வாது மலையை  பொறுத்த வரையில் முரசை, இலந்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் போலி இ-பாஸ் …. கம்ப்யூட்டர் சென்டருக்கு சீல் …..!!

திருவண்ணாமலையில் போலியாக இ-பாஸ் தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த விக்ரம் என்பவர் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல இ-பாஸ் இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரப்பி வந்துள்ளார். மேலும் நீ பாஸ் மற்றும் கார் வாடகை என ஒவ்வொருவரிடமும் தலா 4,500 ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களும் பணத்தை தந்து அவரது காரில் பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை பெரியார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“திருடன் போல் தெரிகிறதா…?” வீர வசனம் பேசும் போலி பத்திரிகையாளர்…. கைது செய்ய கோரிக்கை….!!

போலி பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு மக்களிடம் பணம் வசூலித்து வரும் நிருபரை கைது செய்யுமாறு செங்கம் வட்டார பகுதியில் உள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக பல குற்றங்களை செய்து வரும் நபர்கள் போலியாக பத்திரிகையாளர் என  அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, செங்கம் பகுதியில் சுற்றி வருவதாகவும் பொது மக்களிடையே சென்று தாங்கள் ஒரு பத்திரிகையாளர் என மிரட்டிப் பணம் பறித்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களைக் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு…. நாலு வயது சிறுமியின் அசாத்திய செயல்…. குவியும் பாராட்டு… !!

கொரோனா பாதிப்பை தடுப்பதற்கு ஐஸ் கட்டி மீது அமர்ந்து யோகாசனம் செய்த சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதார வல்லுனர்கள் யோகாசனம் செய்தால், மூச்சுவிடுவது இயல்பாக நடக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் யோகாசனம் செய்து மக்களை ஊக்குவிக்கக் கூடிய வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 4 வயது சிறுமி லிர்த்திகாஸ்ரீ ஐஸ் கட்டி மீது அமர்ந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இலை வெட்டப் போன கணவன்…. குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி… விபரீதத்தின் உச்சம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கணவரை வாழையிலை அறுப்பதற்காக அனுப்பி விட்டு, பெற்ற குழந்தையை தாயே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு அடுத்துள்ள கீழ் சிறுப்பாக்கம் என்ற கிராமத்தில் கலையரசன்- சுகன்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு ஆறு வயதில் நிவேதா என்ற பெண் குழந்தை உள்ளது. சுகன்யாவிற்கு 28 வயதாகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் கலையரசனின் அம்மா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த சம்பவத்தை சுகன்யா தான் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“21,00,000 லஞ்சம் கொடுத்தேன்”… உண்மையை உடைத்த ஒப்பந்ததாரர்… வைரலாகும் ஆடியோ பதிவு…!!

குடிமராமத்து பணி டெண்டருக்காக அமைச்சருக்கு ரூ.21 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளேன் என ஒப்பந்ததாரர் ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி ஏரி குடிமராமத்து பணிக்காக டெண்டர் விடப்பட்டு ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த டெண்டரை ஆணைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மாதவன் என்பவர் எடுக்க முன்வந்த போது தோக்கவாடி, ஆயக்கட்டு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சங்கர் மாதவன் அதே பகுதியைச் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பல்வேறு வழக்குகள்… 6 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்… ஆட்சியர் அதிரடி..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு கொண்ட ஆறு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தெள்ளார் பகுதியில் நகை அடகு கடை வைத்து நடத்திக் கொண்டிருந்த அசோக சக்கரவர்த்தி (56) என்ற நபரை சென்ற மே மாதம் 25ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இதுபற்றி தெள்ளார் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வந்தவாசியை சேர்ந்த திருநாவுக்கரசு (38), சாய்பாபா (33), முருகன் (33), […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீடு கட்டாமலேயே வங்கிக் கணக்கில் பணம் எடுப்பதாக புகார்….!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அருகே வெடால் கிராமத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பதிமூன்று பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருளர் சமூகத்தை சேர்ந்த அவர்கள் தங்களால் வீடு கட்ட இயலாது என்று கூறியதால் கட்டுமான பணியை ஊராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 75% பணம் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விளைநிலத்தில் கல்குவாரி அமைக்க அதிமுக பிரமுகர் திட்டம் – மக்கள் எதிர்ப்பு ….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் கிராமத்தில் விளைநிலத்திற்கு அருகே கல்குவாரி அமைக்கும் அதிமுக பிரமுகருக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் கிராமத்தில் மலைக்கு அருகே உள்ள விளை நிலத்தை இரவோடு இரவாக வாங்கி அந்த இடத்தில் கல்குவாரி அமைக்க அதிமுக பிரமுகர் திட்டமிட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு குவாரி அமைத்தால் அதிலிருந்து வெளியேறும் கல் துகள்கள் விளை நிலங்களிலும் மனிதர்கள் மீது படிந்து பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த பகுதி மக்கள் குற்றம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காதலை ஏற்க முடியாது… மறுத்த சிறுமியை குத்திவிட்டு… தற்கொலை செய்த இளைஞர்..!!

காதலை ஏற்க மறுத்ததால் 17 வயது சிறுமியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர், மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்துள்ள சோ.நம்மியந்தல் என்ற கிராமத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் தான் பிரசாந்த்.. இவருக்கு வயது 19.. இவர் இதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அனிதா என்ற சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று தன்னை காதலிக்குமாறு சிறுமியிடம் பிரசாந்த் வற்புறுத்தி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அனிதா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்… விசாரணை கைதியான கர்ப்பிணி தப்பியோட்டம்..!!

ஜெயிலில் அடைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி  சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. வயது 35 ஆகிறது.. இந்நிலையில் இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த ஜனவரி மாதம், கணவரைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து இவரை ஆரணி டவுன் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ், ஜூலை 4ஆம் தேதி கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து ஜூலை 7ஆம் தேதி விசாரணைக் கைதியாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“கணவர் வெறிச்செயல்”… 8 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கொடூரம்..!!

வரதட்சணை கொடுமை காரணமாக 8 மாத கர்ப்பிணி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவரான இவர்  அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் ஷோபானவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்  4ஆவது முறையாக கர்ப்பமாக இருந்தார் ஷோபனா.. இந்த சூழலில் மணிகண்டன் தொடர்ந்து வரதட்சணை கேட்டது […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு… ”25 நாள் ஆன குழந்தை பலி”… தி.மலையில் சோகம் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,994 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை 78,161 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,765 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமலையில் பிறந்து 25 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளது. 3 முறை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எனக்கு 16 வயசு ஆகுது… என்ன காப்பாத்துங்க… போன் செய்து கல்யாணத்தை நிறுத்திய மாணவி..!!

 12ஆம் வகுப்பு மாணவி, தன் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் ஏற்பாடு செய்திருப்பதாக சைல்டு லைனுக்கு போன் செய்து தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்துள்ள மாம்பட்டு கொல்லக்கொட்டாயைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அதே கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில், 11ஆம் வகுப்பு முடித்து, 12 ஆம் வகுப்பு செல்ல உள்ளார்.. இந்தநிலையில் அந்த மாணவிக்கும் போளூர் வட்டம் திண்டிவனம் ஊராட்சியைச் சேர்ந்த 23 வயதுடைய ராஜிவ் காந்தி  என்ற பால் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் : ஆரணியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா உறுதி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்று வரை 1,624 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 616 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 999 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் ஒரே கடையில் பணிபுரிந்து வந்த 17 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் 8 மாத குழந்தை உட்பட இன்று 127 பேருக்கு கொரோனா உறுதி..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதில் 8 மாத குழந்தை, 39 பெண்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1625 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவண்ணாமலையில் 70 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் மொத்தம் எண்ணிக்கை 1498 ஆக அதிகரித்திருந்தது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 573 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று வரை 916 பேர் சிகிச்சை […]

Categories
காஞ்சிபுரம் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் இன்று புதிதாக 96 பேருக்கும், திருவண்ணாமலையில் 55 பேருக்கும் கொரோனா உறுதி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,471 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரத்தில் புதிதாக 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகள் 1,375 ஆக அதிகரித்திருந்தது. மேலும், இதுவரை 647 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 807 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 17 […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று 114 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 1,313ஆக உயர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்றைய நிலவரப்படி 1,199 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 465 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 727 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,313 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 7 பேர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீஸ் வேலை வாங்கித்தருகிறோம்… ரூ 30,00,000 மோசடி செய்த இருவர் கைது…!!

காவல் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி 30 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகேயுள்ள துருகம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (25), சரவணராஜி (25), சிவகுமார் (24) ஆகிய 3 பேரிடமும் காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய 2 பேர் அவர்களிடமிருந்து 2,25,000 ரூபாயை வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக சிவகுமார் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, இந்த […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று 3, 4 வயது குழந்தைகள் உட்பட 139 பேருக்கு கொரோனா உறுதி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் நேற்றைய நிலவரப்படி 1,060 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 455 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 598 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 7 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி புதிதாக 139 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3, 4 வயது குழந்தைகள் மற்றும் […]

Categories
செங்கல்பட்டு திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் 77 பேர், செங்கல்பட்டில் 127 பேருக்கு இன்று புதிதாக கொரோனா உறுதி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,086 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் இங்கு 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று வரை 442 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் 2 குழந்தைகள் உட்பட 130 பேருக்கு கொரோனா உறுதி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3 மாத குழந்தை மற்றும் 10 மாத குழந்தை இன்று கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1009 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரு விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 440 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றுவரை 879 ஆக இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று புதிதாக 25 பேர், கிருஷ்ணகிரியில் 3 பேருக்கும் கொரோனா உறுதி!

திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 768 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவண்ணாமலையில் இதுவரை கொரோனோவால் பாதித்த 4 பேர் உயிரிந்துள்ளார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செய்யாறு பகுதியில் 15 பேருக்கும், திருவண்னாமலையில் 10 பேருக்கும் புதிதாக தொற்று […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தி.மலை : வெளிமாவட்ட நபர்களுக்கு அனுமதியில்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெளிமாவட்ட நபர்கள் வர அனுமதியில்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம்…. பெண் அதிகாரி செயலால்…. கிராம மக்கள் நெகிழ்ச்சி….!!

வந்தவாசி அருகே மின்வேலியில் உயிரிழந்த மாற்றுத்திறனாளியை பெண் காவல் அதிகாரி தூக்கி சென்ற சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று வந்தவாசி அருகே கரும்புத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியல் சிக்கிய மாற்றுத்திறனாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மின் வேலியில் சிக்கி உயிரிழந்த அந்த மாற்று திறனாளியை தூக்குமாறு அந்த பெண் காவல்துறை அதிகாரி பொது மக்களிடம் கேட்டபோது கொரோனா அச்சம் காரணமாக தூக்க மறுத்து விட்டார்கள். இருப்பினும் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

திருவண்ணமலையில் மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 50 பேருக்கு கொரோனா உறுதியானதால் மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் திருவண்ணாமலையில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக நேற்று வரை 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 393 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 191 ல் இருந்து 241ஆக அதிகரித்துள்ளது.

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் மேலும் 22 பேருக்கு கொரோனா உறுதி… பாதிப்பு எண்ணிக்கை 587ஆக உயர்வு!

திருவண்ணாமலையில் மேலும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது ஏற்கனவே 500ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. நேற்று வரை 565 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 346 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 217 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருவண்ணாமலையில் 6 பெண்கள் உட்பட ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சரக்கு அடிக்கும் போது திடீர் தகராறு… நண்பரை கிணற்றில் தள்ளி கொன்ற நண்பர்கள்..!!

மதுபோதையில் தகராறு ஏற்பட்டதில் ஒருவரைக் கிணற்றில் தள்ளி கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்துள்ள நாராயணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். கூலித்தொழிலாளியான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், மணிகண்டன், ராஜா, பாலகிருஷ்ணன் ஆகிய 4 நண்பர்களும் சேர்ந்து அதே பகுதியிலுள்ள விவசாய கிணறு ஒன்றின் அருகில் உட்கார்ந்து மது குடித்துவிட்டு சீட்டு விளையாடியுள்ளனர். அப்போது சங்கருக்கும், நண்பர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.. இந்த தகராறில் சங்கரை, தாக்கிய அவரது […]

Categories

Tech |