திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபத் திருவிழாவின்போது மகாதீபம் ஏற்றப்படும் நாளன்று, அந்த சமயத்தில் வரும் பௌர்ணமி அன்றும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். இந்த மாதத்திற்கான பௌர்ணமி வருகின்ற […]
