Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிரிவலம் செல்வதற்கு தடையா?…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அறிக்கை  ஒன்றை அறிவித்துள்ளார். அதில் மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா  தொற்று  பரவலை தடுக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். அதனால் பவுர்ணமி முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வது  வழக்கம். தற்போது கொரோன பரவலை  தடுக்க பக்தர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி முதல் புதன்கிழமை இரவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மனைவி…. வாலிபர் செய்த வேலை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தாலி சரடை பறித்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாவூர் கிராமத்தில் சத்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவர் ஏகாம்பரத்துடன் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரத்தில் உள்ள மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் எதிரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்…. ஓட்டுநர் அளித்த புகார் …. போலீஸ் நடவடிக்கை ….!!

வாலிபரிடம் செல்போன் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேகோபுரம் பகுதியில் ஓட்டுநரான கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலூர்பேட்டை முருகன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர்  கத்தியை வைத்து மிரட்டி கர்ணாகரனிடம்  இருந்த  செல்போனை திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து கருணாகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருநெல்வேலியை சேர்ந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதி இன்றி  பட்டாசு தயாரிக்கும் பொருட்களை கொண்டு வந்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணா நுழைவு வாயில் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் முன்வர் என்பவர் அனுமதி இன்றி  பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் கேமிக்கல் சால்ட்  25 கிலோ, அலுமினியம் பவுடர் 10 கிலோ போன்றவற்றை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்….!!

 மாசி மாத பிறப்பை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர் குவிந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதப்பிறப்பு தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாசி மாதம் பிறப்பை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான   பக்தர்கள் வந்து அருணாச்சலேஸ்வரரை நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்துள்ளனர். அதன்பின்னர் கோவிலின் பின்புறம் உள்ள மலைக்கு பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்றுள்ளனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற குற்றங்கள்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது வந்தவாசி, கீழ்க்கொடுங்காலூர் காவல்நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கீழ்க்கொடுங்காலூர் கிராமத்தில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் தன்னை காவல் நிலையத்தில் காட்டி கொடுப்பதாக நினைத்து அவரை அருண்குமார் கொலை செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கீழ்க்கொடுங்காலூர் காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…. பிப்.15 இரவு முதல் பிப்.16 இரவு வரை தடை…. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

பிப்ரவரி 16-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “திருவண்ணாமலையில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தம்பி வீட்டிற்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்கால் பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பச்சையம்மாள் வேலூரில் உள்ள அவரது தம்பி வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் பச்சையம்மாளை செல்போனில் தொடர்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனவேதனையில் மனைவி எடுத்த விபரீத முடிவு…. விசாரணைக்கு பயந்து கணவன் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறில் கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேப்பதுறை பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போர்வெல் லாரி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் திருவண்ணாமலை பகுதியில் வசிக்கும் ஞானஜோதி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் விநாயகம் என்ற மகனும், 1 1\2 வயதில் இளமதி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் இறந்த மகன்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மகன் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி இருந்துள்ளார். இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பூவரசன் என்ற மகனும், 2 வயதில் நித்தியா என்ற மகளும் மற்றும் 8 மாத வேத […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற இருந்த திருமணம்…. திடீரென மாயமான மணப்பெண்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

திருமணம் நேற்று நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அந்த மணப்பெண் திடீரென மாயமாகிவிட்டார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து பெற்றோர் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியர்…. பெற்றோர்கள் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேலாரணி மதுரா தாங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளியப்பன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசியும், சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக புகார் வந்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேர்பாக்கம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மங்கலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ஏழுமலை தன்னுடைய சொந்த நிலத்தில் வேலையை முடித்துவிட்டு மின்மோட்டார் பீஸ் கேரியரை எடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆடுகள்…. மர்மவிலங்கின் கொடூர செயல்…. பீதியில் மக்கள்….!!

மர்ம விலங்கு கடித்து குதறியதில் 12 ஆடுகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆடையூர் கிராமத்தில் விஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டில் 25 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தெய்வானை காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு பட்டியில் அடைத்து வைத்திருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் பட்டியிலிருந்த ஆடுகளை சென்று பார்த்தபோது அங்கிருந்த 25 ஆடுகளை மர்ம விலங்கு கடித்தது தெரிய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 15 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 15 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரம்மதேசம், பெரணமல்லூர், தூசி, அனக்காவூர், செய்யாறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 15 பேர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தந்தை இறந்த துக்கம் தாங்காமல்…. எலி மருந்தை தின்ற மகன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குருவி மலை கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 1-ஆம் தேதி சேட்டு குடும்பத்தகராறில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கலசபாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடவுளே…! “என்னோட எல்லா படமும் வெற்றி பெறணும்”…. பிராத்தனை செய்த பிரபல நடிகர்….!!!

நடிகர் அருண் விஜயகுமார் திருவண்ணாமலை கோவிலில் ரசிகர்களுடன் கிரிவலம் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் விஜயகுமார் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் தனது நடிப்பாலும் திறமையாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இவர் நடித்த படங்களான சினம், அக்னி சிறகுகள், பார்டர், யானை, ஓ மை டாக் போன்ற திரைப்படங்கள் திரைக்கு வர […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருமணமான 7 மாதத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இனாம்காரியந்தல் கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் திவ்யா கடந்த 28-ஆம் தேதி அவரது தாய் வீட்டில் இருந்தபோது திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற பெண்…. கூட்ட நெரிசலில் மர்மநபர் செய்த வேலை…. போலீஸ் விசாரணை….!!

பேருந்தில் பெண்ணிடம் பணம், செல்போனை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் மாலையில் அனைத்து பள்ளிகளும் முடிவடைந்து 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அப்போது கூடலூர் செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவ மாணவிகள் முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றனர். இந்நிலையில் பாலப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் சந்திரா என்பவர் தன்னுடைய பையைக் கையில் வைத்து கொண்டு பேருந்தில் ஏற முயன்றார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பலி…. கிராமமே சோகத்தில் மூழ்கியது….!!!!

திருவண்ணாமலை அருகே ஆடுகளை குளிப்பாட்ட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகே சு. கம்பம்பட்டு என்ற கிராமத்தில் ஆடுகளை குளிப்பாட்ட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நஸ்ரீன், நசீமா மற்றும் சாஹிரா ஆகியோர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். மாட்டுப் பொங்கலுக்கு ஆடு, மாடுகளை குளிப்பாட்டி வண்ண வண்ண கலரில் பொட்டு வைத்து பொங்கல் வைப்பது வழக்கம். இதற்காக 3 சிறுமிகளும் ஆடுகளை குளிப்பாட்ட சென்றபோது, நீரில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்திற்கு வந்த தொழிலாளி…. மர்மநபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

நெசவு தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டரை கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். இவர் ஆரணியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்று விட்டு பாலாஜி சம்பளத்துடன் வீட்டிற்கு செல்வதற்கு ஆரணி புதிய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நான் வெளில போயிட்டு வரேன்” குழந்தைகளுடன் பெண் மாயம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

குழந்தைகளுடன் பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தேசூர் வெடால் கிராமத்தில் மண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் சென்னை டி.நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். இந்த தம்பதியினருக்கு லோகேஷ் என்ற மகனும், மோனிகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சசிகலா தனது 2 குழந்தைகளுடன் கடந்த 3-ஆம் தேதி வெளியே சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சசிகலா வீட்டிற்கு திரும்பி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

2 கார்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

2 கார்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி-அச்சரப்பாக்கம் சாலியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷம்முபீவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த  தம்பதியினருக்கு காதர்பாஷா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஷம்முபீவி தனது உறவினர் வீடான மீஞ்சூருக்கு சென்று விட்டு அவருடைய தங்கை மகன் அசாரின் காரில் வந்தவாசிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் கிராம ஏரிக்கரையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்னை […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலையாரை தரிசிக்க இனி தடுப்பூசி சான்று கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனைவரும் 2 டேஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை கொண்டு வர வேண்டும். இதனை காண்பித்தால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளக்கரவாடி பழைய மண்ணை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரையில் 100 நாள் வேலை பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போதே கணபதி திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்டு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. தி.மலையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுகிளாம்பாடி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் இருக்கும் பேக்கரியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கர் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சங்கர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பிரசாந்த் என்பவரிடம் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். இவர்கள் நார்த்தாம்பூண்டி பகுதியில் இருக்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தி.மலையில் பரபரப்பு…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் மணீஷ் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டான். இதனை அடுத்து சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி அலைந்துள்ளனர். அப்போது கிணற்றுக்கு அருகில் கிடந்த மணீஷின் காலணிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக தீயணைப்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் கிராமத்தில் ருத்ரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ருத்ரனுக்கு மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு ருத்ரன் மாமனார் வீட்டிலேயே வீட்டோடு மாப்பிள்ளையாக மோனிகாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மோனிகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“உறவினர்கள் டார்ச்சர் பண்றாங்க” கைக்குழந்தையுடன் வந்த பெண்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை காவல்துறையினர் பறித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு எறையூர் பகுதியில் வசிக்கும் பழனியின் மனைவியான ராணி என்ற பெண் கைக்குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் ராணி கொண்டுவந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ராணி கூறியதாவது, எனது வீட்டுமனையை உறவினர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

2 மணி நேரமாக வீணான குடிநீர் … வார்டு உறுப்பினரின் போராட்டம் … அதிகாரி பேச்சுவார்த்தை…!!

2 மணி நேரம் குடிநீர்  வீணாக சென்றதால் வார்டு உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஈ.பி நகரில் வார்டு உறுப்பினரான  குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தினமும் சுமார் 2 மணிநேரம் குடிநீர் வீணாக போவதாக ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர் உதயமன் குமாரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கு திடீர் விசிட்…. சத்துணவில் சுவை இல்லை…. எச்சரித்த மாவட்ட ஆட்சியர்….!!!

சத்துணவில் சுவையில்லை, உணவு சரியாகச் சமைக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சமையல்காரர்கள் எச்சரித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளியில் சத்துணவு கூடத்தில் நுழைந்த அவர் சத்துணவு உணவை சாப்பிட்டு பார்த்தார். அது சரியாக சமைக்கபடவில்லை எனவும், உணவில் எந்த சுவையும் இல்லை என்றும் கூறி அங்குள்ள சமையல் செய்பவர்களை எச்சரித்தார். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த நியாயவிலைக் கடைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலத்தை பார்க்க சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பீரோவை உடைத்து 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் செல்வா பகுதியில் கோவிந்தராஜன்-கலாவதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 9-ஆம் தேதி போந்தை  கிராமத்தில் இருக்கும் விவசாய நிலத்தை பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் செல்வா நகரில் பால் பாக்கெட் போடும் நபர் கோவிந்தராஜனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக கோவிந்தராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற இருவர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி … உறவினர்கள் போராட்டம்…!!

மீன் பிடிக்க சென்ற வாலிபர் வீடு திரும்பாததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூளைபட்டு கிராமத்தில் கன்னியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும்  அதே பகுதியில் வசித்து வரும்  சின்னராசு என்பவரும்   ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். பின்னர் சின்னராசு  வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால்  கன்னியப்பன் வராததால் அதிர்ச்சியடைந்த  அவரது மனைவி சின்னராசுவிடம்  விசாரித்துள்ளார். ஆனால்  அவரை பற்றிய எந்த விவரமும் இவருக்கு  தெரியவில்லை. இதனால் கண்ணியப்பனின்   உறவினர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் உதவி பண்ணுங்க…. வாலிபரின் மோசடி வேலை…. போலீஸ் நடவடிக்கை…!!

ஏ.டி.எம் கார்டு மூலம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்வில்லிவலம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் காலாவதியான தனது ஏ.டி.எ.ம் கார்டுக்கு பதிலாக புதிய ஏ.டி.எ.ம் கார்டை வாங்கியுள்ளார். அதற்கான ரகசிய நம்பரை பதிவு செய்வதற்காக ஏழுமலை அருகில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். ஏ.டி.எம் இயந்திரத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்ததால் ஏழுமலை அங்கிருந்த சரண்ராஜ் என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார். இந்நிலையில் உதவி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

BREAKING: திருவண்ணாமலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆட்டுக்குட்டியிடம் தாய்ப்பாசம் காட்டும் நாய்…. வியப்பூட்டும் சம்பவம்….!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் கிராமத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஜோதி. இவரது வீட்டில் செல்லப்பிராணியாக ஆடு மற்றும் நாய் வளர்த்து வருகின்றார். ஜோதியின் வீட்டிலுள்ள ஆடு குட்டி ஈனியுள்ளது. ஆனால் ஆட்டிற்கு பால் சுரக்கவில்லை. இதனையடுத்து குட்டி ஆட்டுக்கு அவரது வளர்ப்பு நாய் பால் கொடுத்து வருகிறது. இதனை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை…. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் ஒரு சில மாவட்டங்களில் மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாகவும், சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாகவும் நாளையும் ஒரு […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#TNRain: திருவண்ணாமலை மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ..!!

கனமழை காரணமாக நாளை திருவண்ணாமலை மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர  மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தங்களது மாவட்டங்களில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சத்துணவு உணவில் பல்லி…. 19 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சத்துணவு சாப்பிட்ட பள்ளி குழந்தைகள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கருங்காலி குப்பம் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 19 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவில் பல்லி கிடந்ததை பார்த்ததும், உணவு சாப்பிட்ட 19 மாணவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டு உடைப்பு…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

சமையல் மாஸ்டரின் வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூழமந்தல் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு சுவேதா என்ற மகளும், சதீஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 20 – ஆம் தேதியன்று ரமேஷ் வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அஞ்சலை தனது உறவினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கனமழையின் காரணத்தினால்….. தீடீரென ஏற்பட்ட வெள்ளம்….. தீயணைப்பு துறை வீரர்களின் பாராட்டுக்குரிய செயல்…..!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 மாடுகளை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எலத்தூர் கிராமத்தில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 19 – ஆம் தேதியன்று 10 – மாடுகளை ஆற்றோரம் உள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளார். இதனை அடுத்து கனமழையின் காரணத்தினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனைப் பார்த்ததும் பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
மாநில செய்திகள்

19 மாதங்களுக்கு பிறகு…. அண்ணாமலையாரை தரிசிக்க சென்ற கோடான கோடி பக்தர்கள்….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு மகாதீபம் ஏற்றப்படும் நாளன்றும், பவுர்ணமியன்றும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக 19 மாதங்களாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கும், மலை ஏறி சாமி தரிசனம் செய்வதற்கும், மாவட்ட நிர்வாகத்தால் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில் 20,000 பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து 19 மாதங்களுக்குப் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் கார்த்திகை கொண்டாட்டம்…. 2668 அடி உயர மலை உச்சியில்…. 11 நாட்கள் காட்சியளிக்கும் மகாதீபம்….!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்காக கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கார்த்திகை தீப நிறைவு நாளான நேற்று  சிகர நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. தூய செம்பினால் செய்யப்பட்ட தீப கொப்பரையை இந்த மகாதீபம் ஏற்றுவதற்கு  பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீடு இடிந்து விபத்து…. சிறுவனுக்கு நடந்த சோகம்….. போலீஸ் நடவடிக்கை….!!

வீடு இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலுப்பதாங்கள் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தரனேஷ் (வயது 8) என்ற மகன் இருந்துள்ளார். இதனை அடுத்து சக்திவேலுக்கு அண்ணாதுரை என்ற தந்தை இருக்கின்றார். இந்நிலையில் அண்ணாதுரையின் ஓட்டு வீடு இடிந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த இடிபாட்டில் அண்ணாதுரை மற்றும் தர்னேஷ் சிக்கிக் கொண்டனர். இதனை பார்த்ததும்  அருகில் உள்ளவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

BREAKING: மாணவர்களே! இந்த மாவட்டத்தில் நாளை…. பள்ளிகளுக்கு மட்டும் லீவு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பதூர் மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம்….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டு போலவே கொரோணா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலின் உற்சவ நிகழ்ச்சிகளை காண பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டின் சுவர் இடிந்து விபத்து…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நம்பேடு கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இதனை அடுத்து இந்த தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக விஜயகுமார் என்பவர் இருக்கிறார். இவர் 12 – ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பலத்த மழையின் காரணமாக திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற போராட்டம்….. மாணவர்களின் கோரிக்கை…. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!

பேருந்து நிலையம் முன்பு மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மாணவ – மாணவிகள் தென்னாங்கூரில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதனை அடுத்து மாணவர்கள் அரசு பேருந்து தடம் எண் : 148 – ல் பயணம் செய்தனர். இந்நிலையில் அந்த பேருந்து ஒரு சில நேரங்களில் தாமதமாகும், நிறுத்தப்பட்டும் இருக்கின்றது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவியர்கள் திடீரென பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. மாலை 6 மணிக்கு மகாதீபம்….!!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக நேற்று மதியம் 1 மணியிலிருந்து வருகிற 20-ஆம் தேதி வரை பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாளை மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிலிண்டர் வெடித்து விபத்து…. குடிசை வீடு சேதம்…. தீயணைப்புத்துறை வீரர்களின் முயற்சி…!!

சிலிண்டர் வெடித்து குடிசை வீடு சேதம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்துவாம்பாடி கிராமத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பச்சையம்மாள் உயிர் தப்பி விட்டார். ஆனால் அவரின் உறவினரான மணிமாறனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் மணிமாறனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து  […]

Categories

Tech |