பரம்பிக்குளம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை கேரள வனப்பகுதியில் அமைந்திருந்தாலும் தமிழக பொதுப்பணி துறையால் தண்ணீர் திறத்தல், அணையை பராமரித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பரம்பிக்குளம் அணை மொத்த கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் காண்டூர் கால்வாயில் உள்ள நல்லாறு பகுதியில் ரூ. 72 கோடி நிதி ஒதுக்கீட்டில் […]
